தொகுதி மறுவரையறை என்பது சமூக நீதியை சிறுமைப்படுத்தும் அரசியல் சதி: முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

தொகுதி மறுவரையறை என்பது சமூக நீதியை சிறுமைப்படுத்தும் அரசியல் சதி: முதல்வர் ஸ்டாலின் கண்டனம்
Updated on
1 min read

சென்னை: தொகுதி மறு​வரையறை என்​பது சமூக நீதி​யைச் சிறுமைப்​படுத்​து​வதற்​கான தன்​னிச்​சை​யான அரசி​யல் சதித் திட்​டம் என்று முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் குற்​றம்​சாட்​டி​யுள்​ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளி​யிட்ட சமூக வலை​தளப்​ப​தி​வில் கூறி​யிருப்​ப​தாவது: பிரதமர் மோடி தலை​மையி​லான என்​டிஏ அரசு நாடாளு​மன்​றத்​தின் அடிப்​படை அமைப்​பையே திட்​ட​மிட்​டுச் சீர்​குலைக்​கிறது. தொகுதி மறு​வரையறை என்ற பெயரில் தொகு​தி​களின் எண்​ணிக்​கையை உயர்த்​து​வதற்கான முன்​மொழி​வு, ‘குறைந்​த​பட்ச அரசு, அதி​கபட்ச நிர்​வாகம்’ என்ற அவர்​களின் சொந்த முழக்​கத்​துக்கே எதி​ரான​தாக அமைந்​துள்​ளது. இந்த முடி​வி​னால் மக்​களின் வரிப்​பணம் வீணாகும், நாடாளு​மன்​றச் செயல்​பாடு​களின் தரம் குறை​யும். மேலும், இந்​தி​யாவை மாநிலங்​களின் ஒன்​றிய​மாக வரையறுக்​கும் அரசி​யலமைப்​புச் சட்​டத்​தின் பிரிவு 1-க்​கும் இது எதி​ரானது. இது பன்​முக, கூட்​டாட்​சித் தன்​மை​யைச் சிறுமைப்​படுத்​தும் ஒற்​றைத்​துவ எல்லை மீறலாகும்.

இதற்​கெல்​லாம் மேலாக, தொகுதி மறுசீரமைப்பு என்பது, பாஜக ஆதிக்​கம் செலுத்​தும் வடமாநிலங்​களுக்கு ஆதர​வாக வலு​வூட்​டி, தென்​மாநிலங்​களின் குரலை நெரிக்​கும். வட மாநிலங்​களின் தொகுதி எண்​ணிக்கை இரு மடங்​காகும். அதேவேளை தென் ​மாநிலங்​களின் அளவு 24 சதவீதத்​திலேயே தேங்கி நிற்​கிறது. இது மக்​கள் தொகையை சிறப்​பாகக் கட்​டுப்​படுத்​தி​யதற்காகத் தமிழகம், கர்நாட​கா, கேரளம், தெலங்​கானா போன்ற மாநிலங்களைத் தண்​டிப்​பதாகும்.

இது அவசரக​தி​யில் தற்​போது செய்​யப்​படு​வதும் நம் அச்​சத்தை அதி​க​மாக்​கு​கிறது. இத்​தகைய முக்​கிய நடவடிக்​கையை மாநிலத் தேர்​தல்​களுக்​கிடையே திணிக்க வேண்​டிய அவசி​யம் என்ன? தேர்​தல் சார்ந்த கதை​யாடல்​களை வடிவ​மைக்​க​வும், பெண் வாக்​காளர்​களிடம் செல்​வாக்கு பெறவும் 2024 நாடாளு​மன்ற மக்​களவை பொதுத்​தேர்​தலின்​போது செய்த முந்​தைய முயற்​சிகளைப் போலவே இது​வும் அமைந்​துள்​ளது.

பெண்​களுக்​கான 33 சதவீத இட ஒதுக்​கீட்டை நாங்​கள் முழு​மனதோடு ஆதரிக்​கிறோம். அதில் மாற்​றுக்​கருத்​துக்கே இடமில்​லை. ஆனால், பொறுப்​போடு செயல்​பட்ட மாநிலங்​களைத் தண்​டிக்​கும் வகை​யில் தொகுதி எண்​ணிக்​கையை அதி​கரிக்​காமலேயே, அதை நடை​முறைப்​படுத்த வேண்​டும் என்​று​தான் நாங்​கள் கோரு​கிறோம். அவர்​களின் நோக்​கம் உண்​மை​யான​தாக இருந்​தால், இப்​போதுள்ள தொகுதி அளவிலேயே மகளிருக்​கான 33 சதவீத இட ஒதுக்​கீட்டை வழங்​கு​வதை எது​வும் தடுக்​க​வில்​லை​யே?

‘வளர்ந்த இந்​தி​யா’ என ஒரு​புறம் சொல்​லிக்​கொண்டே பல ஆண்​டு​களாக கிரீமிலேயர் உச்​சவரம்பை ரூ.8 லட்​சத்​தில் இருந்து மாற்​றாமல் வைத்​திருந்து ஓ.பி.சி. மக்​களுக்கு அவர்​களுக்​குரிய பங்​கீடு கிடைக்​காமல் வஞ்​சித்​தார்​கள். இதர பிற்​படுத்​தப்​பட்ட மகளிரின் பிர​தி​நி​தித்​து​வத்​துக்​கான எந்​த​வித உத்​தர​வாதத்​தை​யும் வழங்​க​வில்​லை. 2027 மக்​கள் தொகைக் கணக்​கெடுப்​பின் மூலம் முதல்​முறை​யாக நாம் அறிய​வுள்ள சாதி​வாரி எண்​ணிக்கை முடிவு​களைக்​கூட பரிசீலிக்​காமல் அவசர​மாக அவர்​கள் செயல்​படு​வது இதில் அவர்​களுக்கு உண்​மை​யான அக்​கறை இல்லை என்​பதை அம்​பலப்​படுத்​துகிறது.

இவர்​கள் செய்ய நினைப்​பது சீர்​திருத்​தமே அல்ல, இது அதி​காரத்தை ஓரிடத்​தில் குவித்​து, நாடாளு​மன்​றத்தை பலவீனப்​படுத்​தி, தென்​னகத்தை விளிம்பு நிலைக்​குத் தள்​ளி, சமூக நீ​தி​யைச் சிறுமைப்படுத்​து​வதற்​கான தன்​னிச்​சை​யான அரசி​யல் சதித் திட்​டம் என முதல்​வர் தெரிவித்​துள்​ளார்.

தொகுதி மறுவரையறை என்பது சமூக நீதியை சிறுமைப்படுத்தும் அரசியல் சதி: முதல்வர் ஸ்டாலின் கண்டனம்
10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் ‘சென்டம்’ பெறும் மாணவர்களின் விடைத்தாள்கள் முழுமையாக ஆய்வு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in