புதிய அரசு பதவியேற்பு குறித்து தலைமைச் செயலாளர், டிஜிபி, அதிகாரிகள் ஆலோசனை

புதிய அரசு பதவியேற்பு குறித்து தலைமைச் செயலாளர், டிஜிபி, அதிகாரிகள் ஆலோசனை
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் புதிதாக அரசு பொறுப்பேற்கவுள்ள நிலையில், தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி ஆகியோர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சாய்குமார், உள்துறை செயலாளர் மணிவாசன், காவல் துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் மற்றும் சென்னை காவல் ஆணையர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இதனையடுத்து தவெகவின் சட்டமன்றக் குழு தலைவராக அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தச் சூழலில், ஆட்சியமைக்க உரிமை கோரி ஆளுநருக்கு விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

தவெக தலைமையிலான புதிய அரசு அமையவுள்ள நிலையில், பதவியேற்பு விழா மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்க இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சாய்குமார், உள்துறை செயலாளர் மணிவாசன், காவல் துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் உள்ளிட்ட பல்வேறு உயர் அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர்.

புதிய அரசு பதவியேற்பு குறித்து தலைமைச் செயலாளர், டிஜிபி, அதிகாரிகள் ஆலோசனை
யார் இந்த ஜோசப் விஜய்? - தமிழகத்தில் தடம் பதித்த தவெக தலைவரின் பின்புலம்!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in