“இந்தியர்களின் தற்சார்பு உணர்வுக்கு புத்தெழுச்சி ஏற்படுத்தியவர் வ.உ.சி” - முதல்வர் விஜய் புகழ் வணக்கம்

“இந்தியர்களின் தற்சார்பு உணர்வுக்கு புத்தெழுச்சி ஏற்படுத்தியவர் வ.உ.சி” - முதல்வர் விஜய் புகழ் வணக்கம்
Updated on
1 min read

சென்னை: “இந்தியர்களின் தன்னம்பிக்கைக்கும், தற்சார்பு உணர்விற்கும் புதிய எழுச்சியை ஏற்படுத்தியதோடு, உழைக்கும் தொழிலாளர்களின் உரிமைகளுக்கான போராட்டத்தையும் முன்னெடுத்தவர்” என வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் புகழ் வணக்கம் செலுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், “இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் தன்னிகரற்ற வீரத்துடனும், தியாக உணர்வுடனும் போராடி, மக்கள் மனங்களில் சுதேசி உணர்வை விதைத்த ‘கப்பலோட்டிய தமிழன்’ வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாளில், அவருக்கு எனது புகழ் வணக்கங்களைச் செலுத்துகிறேன்.

ஆங்கிலேயரிடமிருந்து அரசியல் விடுதலை மட்டுமின்றி, பொருளாதார விடுதலையும் அவசியம் என்பதை வலியுறுத்தும் வகையில், சுதேசிக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கி, இந்தியர்களின் தன்னம்பிக்கைக்கும், தற்சார்பு உணர்விற்கும் புதிய எழுச்சியை ஏற்படுத்தியதோடு, உழைக்கும் தொழிலாளர்களின் உரிமைகளுக்கான போராட்டத்தையும் முன்னெடுத்தவர் வ.உ.சிதம்பரனார்.

தாய்நாட்டின் விடுதலை, சுதேசி உணர்வு, உழைப்பாளர்களின் உரிமை ஆகியவற்றிற்காகத் தன் வாழ்நாளையே அர்ப்பணித்த “செக்கிழுத்த செம்மல்” வ.உ.சிதம்பரனாரின் வீரத்தையும், தேசப்பற்றையும், தியாகத்தையும் இந்நாளில் நினைவுகூர்ந்து போற்றுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.

“இந்தியர்களின் தற்சார்பு உணர்வுக்கு புத்தெழுச்சி ஏற்படுத்தியவர் வ.உ.சி” - முதல்வர் விஜய் புகழ் வணக்கம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடு, தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in