மக்களுக்கு நன்றிக் கடன் செலுத்த அமைந்த அரசு: சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் உறுதி

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற பிறகு, உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்துப் பேசிய முதல்வர் விஜய்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற பிறகு, உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்துப் பேசிய முதல்வர் விஜய்.

Updated on
1 min read

சென்னை: “இது பதவிக்​காக, அதி​காரத்​துக்​காக அமைந்த அரசு அல்ல. நம்​பிய மக்​களுக்கு நன்​றிக் கடன் செலுத்​து​வதற்​காக அமைந்த அரசு” என்று சட்​டப்​பேர​வை​யில் நம்​பிக்கை வாக்​கெடுப்​பில் வெற்றி பெற்ற பின் முதல்​வர் விஜய் தெரி​வித்​தார்.

சட்​டப்​பேர​வை​யில் முதல்​வர் விஜய் தலை​மையி​லான அரசின் பெரும்​பான்​மையை நிரூபிக்​கும் நம்​பிக்கை வாக்​கெடுப்பு நேற்று நடை​பெற்​றது. இதில் வெற்றி பெற்ற பிறகு, முதல்​வர் விஜய் பேசி​ய​தாவது: சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் எந்த அணி​யும் இல்​லாமல் தனி அணி​யாக, தனி சிறப்​புமிக்க அணி​யாக, மக்​கள், மக்​களை விரும்​பும் அணி​யாக, மக்​கள் விரும்​பும் அணி​யாக களம் கண்​டோம்.

கட்சி ஆரம்​பித்த மூன்றே ஆண்​டு​களுக்​குள் 34.92 சதவீதத்​துடன் 1.72 கோடி வாக்​கு​களை மக்​கள் தந்​தனர். தவெகவை தனிப்​பெரும் கட்​சி​யாக சட்​டப் பேர​வைக்கு அனுப்பி வைத்​தனர். மிக மிகச் சிறிய அளவில், ஒரு நூலிழை​யில் தனிப்​பெரும்​பான்மை கொஞ்​சம் தள்​ளிப் போயிருக்​கிறது.

அதனால், இந்த அரசை சிறு​பான்மை அரசு போல யாரும் நினைத்​தால், அதி​லும் மகிழ்ச்​சி​யே. இது சிறு​பான்மை அரசு​தான். சிறு​பான்மை மக்​களுக்​கான பாது​காப்பை உண்​மை​யாக நிலை​நாட்​டும் அரசு​தான்.

அது​மட்​டுமல்ல, பெண்​கள், குழந்​தைகள், முதி​யோர், இளைஞர்​கள், அரசு ஊழியர்​கள், ஆசிரியர்​கள், உழைக்​கும் வர்க்​கத்​தினர் என அனைத்து மக்​களுக்​கு​மாக அமைந்த அரசு​தான் இந்த அரசு. அந்த நம்​பிக்கை அனை​வருக்​கும் ஏற்​பட்​ட​தால்​தான் இந்த நம்​பிக்கை தீர்​மானத்​தில் அது நிரூபிக்​கப்​பட்​டுள்​ளது.

இந்த நேரத்​தில், அரசு சார்​பாக சில உத்​தர​வாதங்​களை தர விரும்​பு​கிறேன். இந்த அரசு மனசாட்சி உள்ள மக்​களாட்​சியை நிச்​ச​யம் தரும். சமூக நீதி, சம நீதி, சம வாய்ப்​புடன் உண்​மை​யான உறு​தி​யான ஜனநாயகத்​துடன் மதச்​சார்​பற்ற சமூக நீதி கொள்​கைகளு​டன் இந்த அரசு நடக்​கும்.

எம்​மத​மும் நம் மதமே. எல்லா மக்​களும் நம் மக்​களே. இதில் வாக்​களித்​தவர்​கள், வாக்​களிக்​காதவர்​கள் என்ற பாகு​பாடே இருக்​காது. இது எல்​லோருக்​கு​மான, சாமானியர்களுக்​கான, சாதி, மத எல்​லைகளைக் கடந்த, பண்​பாடு காக்​கும், பண்​பட்ட அரசு.

அரசி​யல் காரணங்​களுக்​காக யாரை​யும், எதற்​காக​வும் புண்​படுத்​தாத அரசு. இதை எல்​லாம் போகப்​போக புரிந்து கொள்​வார்​கள். இது பதவிக்​காக, அதி​காரத்​துக்​காக அமைந்த அரசு அல்ல.

நம்​பிய மக்​களுக்கு நன்​றிக் கடன் செலுத்​து​வதற்​காக அமைந்த அரசு. அதி​காரம் காட்டி மிரட்​டும் அரசு அல்ல. அனை​வரை​யும் அரவணைக்​கும் அரசு. எவர் மீதும் வெறுப்பு காட்​டும் அரசு அல்ல. எல்​லோரை​யும் விரும்​பும் அரசு. மக்​களே முக்​கி​யம்.

மக்​கள் நலன் மட்​டுமே முக்​கி​யம். அதுவே எங்​கள் ஒரே நிலைப்​பாடு. எனவே, மனசாட்சி உள்ள மக்​களாட்​சிக்கு ஆதர​வளித்த அனை​வருக்​கும்​ நன்​றி. இவ்​வாறு அவர்​ பேசி​னார்​.

<div class="paragraphs"><p>நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற பிறகு, உறுப்பினர்களுக்கு நன்றி&nbsp;தெரிவித்துப் பேசிய முதல்வர் விஜய்.</p></div>
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 14 மே 2026

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in