

சென்னை: சென்னை ரயில்வே கோட்டம் கடந்த நிதி ஆண்டில் ரூ.5,038 கோடி வருவாய் ஈட்டி, சாதனை படைத்துள்ளதாக ரயில்வே கோட்ட மேலாளர் சைலேந்திரசிங் தெரிவித்தார்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: கடந்த நிதி ஆண்டில் (2025-26), சென்னை ரயில்வே கோட்டம் ரூ.5,038 கோடி வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது.
இது முந்தைய ஆண்டைவிட 9.26 சதவீதம் அதிகம். நடப்பு நிதி ஆண்டில் ஜூலை 31-ம் தேதி வரை ரூ.1,636.68 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. கடந்த நிதி ஆண்டில் சரக்கு ஏற்றுதல் 6.20 சதவீதம் அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.