

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் வரும் 28-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியான செய்திக்குறிப்பு:
காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவிழந்தது. தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஓரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று முதல் வரும் 28-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும். மார்ச் 1 முதல் 3 வரை தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும்.
சென்னை, செங்கை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலத்தில் இன்றும் நாளையும் லேசான பனிமூட்டம் காணப்படும்.