டெல்லியில் குடியரசுத் தலைவருடன் தமிழக முதல்வர் விஜய் சந்திப்பு

சோனியா, ராகுல் காந்தியுடன் ஆலோசனை
டெல்லியில் குடியரசுத் தலைவருடன் தமிழக முதல்வர் விஜய் சந்திப்பு
Updated on
2 min read

சென்னை: அரசுப் பயண​மாக டெல்லி சென்​றுள்ள தமிழக முதல்​வர் விஜய், குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்​மு, குடியரசு துணைத் தலை​வர் சி.பி.​ரா​தாகிருஷ்ணன் மற்​றும் காங்​கிரஸ் மூத்த தலை​வர்​கள் சோனியா காந்​தி, ராகுல் காந்தி ஆகியோரை சந்​தித்து பேசி​னார். இன்று நடை​பெறும் நிதி ஆயோக் கூட்​டத்​தில் பங்கேற்கிறார்.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் வெற்றி பெற்று தவெக தலை​வர் விஜய், கடந்த மே 10-ம் தேதி முதல்​வ​ராகப் பதவி​யேற்​றார். அதன்​பின் அரசுப் பயண​மாக கடந்த மே 27-ம் தேதி முதல் முறை​யாக முதல்​வர் விஜய் டெல்லி சென்​றார். அங்கு பிரதமர் நரேந்​திர மோடியை சந்​தித்​து, பல்​வேறு கோரிக்​கைகள் அடங்​கிய மனுவை வழங்​கி​னார்.

தொடர்ந்து மத்​திய நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமனை​யும் சந்​தித்த முதல்​வர் விஜய், தமிழகத்​துக்​குத் வேண்​டிய நிலுவை நிதி உள்​ளிட்ட கோரிக்​கைகளை நிறைவேற்ற வேண்​டு​கோள் விடுத்​தார். பின்​னர் டெல்லி பயணத்தை முடித்​துக் கொண்டு மறு​நாளே சென்னை திரும்​பி​னார்.

இந்​நிலை​யில் 2-வது முறை 3 நாள் அரசுப் பயண​மாக முதல்​வர் விஜய் நேற்று டெல்லி சென்​றார். சென்​னை​யில் இருந்து தனி விமானத்​தில் நேற்று காலை 10 மணிக்​குப் புறப்​பட்டு டெல்லி சென்​றடைந்த முதல்​வர் விஜய், முதலில் அங்​குள்ள தமிழக அரசின் இல்​லத்​துக்​குச் சென்​றார். அங்கு அவரை தமிழக அரசு அதி​காரி​கள் பூங்​கொத்து கொடுத்து வரவேற்​றனர். தொடர்ந்து அவருக்​கு காவல் துறை​யின் அணிவகுப்பு மரி​யாதை வழங்​கப்​பட்​டது.

அதன்​பின்​னர் முதல்​வர் விஜய் சிறிது நேரம் ஓய்வு எடுத்​தார். மாலை 4 மணிக்​குத் தமிழக அரசு இல்​லத்​தில் இருந்து குடியரசுத் தலை​வர் மாளி​கைக்கு அவர் காரில் புறப்​பட்டு சென்​றார். அங்கு குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்​முவை, முதல்​வர் விஜய் மரி​யாதை நிமித்​த​மாகச் சந்​தித்​துப் பேசி​னார். அதைத் தொடர்ந்து தமிழகத்​தைச் சேர்ந்த குடியரசு துணைத் தலை​வர் சி.பி.ராதாகிருஷ்ணனை​யும் அவரது இல்​லத்​தில் விஜய் சந்தித்தார்.

இதையடுத்து காங்​கிரஸ் மூத்த தலை​வர்​கள் சோனியா காந்தி மற்​றும் ராகுல் காந்​தி​யை, அவர்​களது இல்​லத்​தில் முதல்​வர் விஜய் நேரில் சந்​தித்து கலந்​துரை​யாடி​னார். அப்​போது ஆட்​சி​யமைக்க காங்​கிரஸ் ஆதரவு தந்​ததற்கு விஜய் நன்றி தெரி​வித்​த​தாக​வும், தமிழகத்​தில் தவெக கூட்​ட​ணி​யைப் பலப்​படுத்த காங்​கிரஸ் உறு​துணை​யாக இருக்க வேண்​டும் என்றும் வலி​யுறுத்​தி​ய​தாக​தகவல்​கள் கிடைத்​துள்​ளன.

அதன்​பின்​னர், இந்​தி​யக் கம்​யூனிஸ்ட் பொதுச் செய​லா​ளர் டி.​ராஜாவை அவரது அலு​வல​கத்​தில் சந்​தித்து நன்றி தெரி​வித்​தார். தேர்​தலுக்​குப் பின்​னர் காங்​கிரஸ் கட்​சி​யுடன் தவெக கூட்​டணி அமைத்​துள்ள நிலை​யில், இந்​தச் சந்​திப்பு முக்​கி​யத்​து​வம் வாய்ந்​த​தாகப் பார்க்​கப்​படு​கிறது.

நிதி ஆயோக் கூட்டம்: பிரதமர் மோடி தலை​மை​யில் மாநில முதல்​வர்​களு​ட​னான நிதி ஆயோக் கூட்​டம் டெல்​லி​யில் இன்று நடை​பெறவுள்​ளது. இதில் மத்​திய நிதி அமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன், பாது​காப்​புத் துறை அமைச்​சர் ராஜ்​நாத் சிங் உள்​ளிட்​டோர் பங்கேற்​கின்​றனர்.

இந்த ஆண்டுக்கான கூட்டம் ‘வளர்ந்த இந்தியா @2047’க்கான அனைவரையும் உள்ளடக்கிய மனித மேம்பாடு' என்ற கருப்பொருளின் கீழ் நடைபெறுகிறது. நாட்டின் வளர்ச்சி முன்னுரிமை மற்றும் அவற்றைச் செயல்படுத்துவதற்கான உத்திகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

இந்​தக் கூட்​டத்​தில் முதல்​வர் விஜய் பங்கேற்கிறார். கூட்​டம் முடிந்த பின்​னர் பிரதமர் மோடி மற்​றும் மத்​திய அமைச்​சர் அமித்ஷா உள்​ளிட்​டோரை சந்​திப்​பார் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. நாளை வெள்​ளிக்​கிழமை காலை டெல்​லி​யில் இருந்து தனி விமானத்​தில் புறப்​பட்டு தனிப்​பட்ட பயண​மாக கர்​நாடக மாநிலம் மங்​களூரு செல்​கிறார். அங்​குள்ள மூகாம்​பிக்கை கோயிலுக்கு சென்​று​விட்டு பின்பு மங்​களூரு​வில் இருந்​து, தனி வி​மானத்​தில் புறப்​பட்டு வெள்​ளிக்​கிழமை மாலை 6 மணிக்​கு முதல்​வர்​ விஜய்​ சென்​னை திரும்​பு​கிறார்​ என்​று தகவல்​கள்​ வெளி​யாகி உள்​ளன.

டெல்லியில் குடியரசுத் தலைவருடன் தமிழக முதல்வர் விஜய் சந்திப்பு
‘பத்ம ஸ்ரீ’ பாரதிராஜா காலமானார்: முதல்வர் விஜய், ஸ்டாலின், இளையராஜா, கமல், ரஜினி உள்ளிட்டோர் அஞ்சலி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in