வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார்: ஓய்வுபெற்ற வருமான வரித்துறை அதிகாரி, மனைவி மீது சிபிஐ வழக்குப் பதிவு

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார்: ஓய்வுபெற்ற வருமான வரித்துறை அதிகாரி, மனைவி மீது சிபிஐ வழக்குப் பதிவு
Updated on
1 min read

சென்னை: வரு​மான வரித்​துறை ஓய்வு பெற்ற முதன்மை ஆணை​யர் மற்​றும் அவரது மனைவி ஆகியோர் வரு​மானத்​துக்கு அதி​க​மாக சொத்​துகளை சேர்த்​த​தாக எழுந்த புகாரின் பேரில் சிபிஐ வழக்​குப்​ப​திவு செய்​துள்​ளது.

வரு​மான வரித்​துறை ஓய்வு பெற்ற முதன்மை ஆணை​யர் ரெங்​க​ராஜ். ஐஆர்​எஸ் அதி​காரி​யான இவர் மற்​றும் அவரது மனைவி உமா மகேஸ்​வரி ஆகியோர் வரு​மானத்​துக்கு அதி​க​மாக சொத்து சேர்த்​த​தாக தேனி மாவட்​டத்​தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்​பவர் சிபிஐ​யின் லஞ்ச ஒழிப்​புப் பிரி​வில் புகார் தெரி​வித்​திருந்​தார்.

அதன்​படி, சிபிஐ விசா​ரணை நடத்​தி​யது. ஆரம்​பக்​கட்ட விசா​ரணை​யில், பணி​யில் இருந்த கால​கட்​டத்​தில் ரெங்​க​ராஜ் மற்​றும் அவரது மனைவி தங்​களது அறியப்​பட்ட வரு​மானத்​துக்கு அதி​க​மாக அசை​யும் மற்​றும் அசையா சொத்​துகளை குவித்​திருப்​ப​தாகக் கூறப்​படு​கிறது.

அவர்​களது வரு​மானம், செல​வினங்​கள் மற்​றும் முதலீடு​கள் தொடர்​பான ஆவணங்​களை ஆய்வு செய்​த​போது, சுமார் 34.53 சதவீதம் அளவுக்கு வரு​மானத்​துக்கு அதி​க​மான சொத்​துகள் இருப்​ப​தாக சிபிஐ கண்​டறிந்​துள்​ளது..

இதையடுத்து ஊழல் தடுப்​புச் சட்​டத்​தின் கீழ் ரெங்​க​ராஜ், உமா மகேஸ்​வரி மீது சிபிஐ வழக்​குப்​ப​திவு செய்து விசா​ரணை​யைத் தீவிரப்​படுத்​தி​யுள்​ளது. அவர்​களு​டன் தொடர்​புடைய வங்​கிக் கணக்​கு​கள், நிலம், வீடு​கள் மற்​றும் பிற முதலீடு​கள் குறித்த விவரங்​களும் ஆய்வு செய்​யப்​பட்டு வரு​கின்​றன.

இந்த வழக்​கின் ஒரு பகு​தி​யாக, சென்னை உள்​ளிட்ட இடங்​களில் உள்ள சொத்து ஆவணங்​கள் மற்​றும் நிதிப் பரிவர்த்​தனை​கள் குறித்து அதி​காரி​கள் தகவல் சேகரித்து வரு​கின்​றனர். விசா​ரணை​யின் முடி​வில் மேலும் பல தகவல்​கள் வெளி​யாகலாம் என சிபிஐ வட்​டாரங்​கள் தெரி​வித்​தன.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார்: ஓய்வுபெற்ற வருமான வரித்துறை அதிகாரி, மனைவி மீது சிபிஐ வழக்குப் பதிவு
குற்றச் சம்பவங்களால் பாதிக்கப்பட்ட மக்களை முதல்வர் விஜய் சந்திக்காதது ஏன்? - நயினார் நாகேந்திரன் கேள்வி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in