திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றக்கோரி தீக்குளித்து உயிரிழந்த பூர்ணசந்திரன் உடலுக்கு பாஜக, இந்து அமைப்பினர் அஞ்சலி

தமிழகம் முழுவதும் இன்று கோயில்களில் மோட்ச தீபம் ஏற்ற அழைப்பு
பூர்ணசந்திரன் | மதுரையில் பூர்ண சந்திரனுக்கு இரங்கல் தெரிவித்து பாஜகவினர் ஒட்டிய போஸ்டர்.

பூர்ணசந்திரன் | மதுரையில் பூர்ண சந்திரனுக்கு இரங்கல் தெரிவித்து பாஜகவினர் ஒட்டிய போஸ்டர்.

Updated on
2 min read

மதுரை: ​திருப்​பரங்​குன்​றம் மலை உச்​சி​யில் உள்ள தீபத்​தூணில் தீபம் ஏற்​றக் கோரி தீக்​குளித்து உயி​ரிழந்த பூர்​ணசந்​திரனின் உடலுக்கு பாஜக,

இந்து அமைப்​பினர் அஞ்​சலி செலுத்​தினர். மதுரை நரிமேடு பகு​தி​யைச் சேர்ந்த பூர்ணசந்திரன் (40), தல்​லாகுளம் புறக்​காவல்​நிலை​யத்துக்​குள் புகுந்து தீக்​குளித்து தற்​கொலை செய்​துகொண்​டார்.

முன்​ன​தாக, திருப்​பரங்​குன்​றத்​தில் தீபம் ஏற்​றக்கோரி உயிரை மாய்த்​துக் கொள்​வ​தாகக் கூறி ஆடியோ வெளி​யிட்​டிருந்​தார். மதுரை அரசு ராஜாஜி மருத்​து​வ​மனை​யில் நேற்று அவரது உடல் பிரேதப் பரிசோதனை செய்​யப்​பட்​டது.

அரசு மருத்​து​வ​மனை பிணவறை பகு​தி​யில் பாஜக, இந்து முன்​னணி மற்​றும் பல்​வேறு இந்து அமைப்​பு​களைச் சேர்ந்​தோர் ஆயிரக்​கணக்​கில் கூடினர்.

பிரேதப் பரிசோதனைக்​குப் பிறகு அவரது உடலை குடும்​பத்​தினரிடம் ஒப்​படைக்க போலீ​ஸார் முயன்​றனர். அப்​போது அங்கு திரண்​டிருந்​தவர்​கள், “நயி​னார் நாகேந்​திரன், காடேஸ்​வராசுப்​பிரமணி​யன், அர்ஜுன் சம்​பத் உள்​ளிட்​டோர் அஞ்​சலி செலுத்​திய பிறகே, உடலைப் பெறு​வதுகுறித்து முடி​வெடுப்​போம்” என்றனர்.

இதற்​கிடை​யில், தென்​னிந்​திய பார்​வர்டு பிளாக் தலை​வர் திரு​மாறன், பாஜக மாவட்​டத் தலை​வர் மாரிசக்​கர​வர்த்தி தலை​மை​யில் பாஜக, இந்து அமைப்​பு​களைச் சேர்ந்​தோர் வாயில் கருப்​புத் துணி​யைக் கட்​டிக் கொண்​டு, அப்​பகு​தி​யில் சாலை மறியலில் ஈடு​பட்​டனர்.

இதையொட்​டி, காவல் துணை ஆணை​யர்​கள் அனி​தா, ராஜேஸ்​வரி, திரு​மலைக்​கு​மார், எஸ்​.பி. அரவிந்த் தலை​மை​யில் 400-க்​கும் மேற்​பட்ட போலீ​ஸார் குவிக்​கப்​பட்​டிருந்​தனர்.

பின்​னர், பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், இந்து முன்​னணி தலை​வர் காடேஸ்​வரா சுப்​பிரமணி​யம், இந்து மக்​கள் கட்சி தலை​வர் அர்​ஜுன் சம்​பத், பார​திய பார்​வர்டு பிளாக் தலை​வர் முரு​கன், அதி​முக மருத்​து​வரணி இணைச் செய​லா​ளர் டாக்​டர் சரவணன் உள்​ளிட்​டோர் பூர்ணசந்திரன் உடலுக்கு அஞ்​சலி செலுத்​தினர்.

மேலும், பூர்​ணசந்​திரனின் மனைவி இந்​து​மதி மற்​றும் அவரது பெற்​றோருக்கு ஆறு​தல் கூறி, ரூ.10 லட்​சம் நிவாரண நிதிக்​கான காசோலையை வழங்​கினர். பின்​னர் பூர்ணசந்திரன் உடல் ஊர்​வல​மாக கொண்​டு ​செல்​லப்​பட்டு தத்​தனேரி மயானத்​தில் தகனம் செய்​யப்​பட்​டது

ஊர்​வலத்​தில் ஏராள​மானோர் பங்​கேற்​றனர். பூர்ண சந்​திரனின் ஆன்மா சாந்​தி​யடைய தமிழகம் முழு​வதும் உள்ள கோயில்​களில் இன்று மோட்ச தீபம் ஏற்​று​மாறு பாஜக மற்​றும் இந்து அமைப்​பினர் அழைப்பு விடுத்​துள்​ளனர்.

பூர்​ணசந்​திரனின் மறைவுக்கு இரங்​கல் தெரிவிக்​கும் வகை​யில் பாஜக, இந்து முன்​னணி சார்​பில் ‘தீப தியாகிக்கு அஞ்​சலி’ என்ற தலைப்​பில் மதுரை​யில் பல்​வேறு இடங்​களில் போஸ்​டர் ஒட்​டப்​பட்​டிருந்​தது.

தல்​லாகுளம், எஸ்​.எஸ். காலனி பகு​தி​யில் போஸ்​டர்​களை ஒட்​டிய பாஜக நிர்​வாகி ராஜதுரை உள்​ளிட்​டோரை போலீ​ஸார் கைது செய்​து, போஸ்​டர்​களை பறி​முதல் செய்​தனர். பின்​னர் அவர்​கள் விடுவிக்​கப்​பட்​டனர். சில இடங்​களில் போஸ்​டர்​களை போலீ​ஸார் கிழித்து அகற்​றிய​தாக இந்து அமைப்​பினர் குற்​றம் சாட்​டினர்.

உறவினர்கள் ஆவேசம்; அரசியல் தலைவர்கள் கண்டனம்: ​திருப்​பரங்​குன்​றம் தீபத்​தூணில் தீபம் ஏற்​றக்கோரி தற்​கொலை செய்​து​கொண்ட பூர்​ணசந்​திரன், மானாமதுரை அரு​கே​யுள்ள நெட்​டூர் ஆலங்​குளத்​தைப் பூர்​வீக​மாக கொண்​ட​வர். இவரது தந்தை பெரிய​சாமி டாஸ்​மாக்​கில் பொது மேலா​ள​ராகப் பணிபுரிந்து ஓய்​வு​ பெற்​றவர். தற்​போது வழக்​கறிஞ​ராக உள்​ளார். இவரது மனைவி காளீஸ்​வரி. உயிர்​இழந்த பூர்​ணசந்​திரனுக்கு மனைவி இந்​து​ம​தி, மகன்​கள் இனியன் (6) சிவநேசன் (3) உள்​ளனர்.

பூர்​ணசந்​திரனின் தந்தை பெரிய​சாமி கூறும்​போது, “பூர்​ணசந்​திரன் ஆன்மிகத்​தில் மிகுந்த ஈடு​பாடு கொண்ட​வர். முரு​கன் கோயிலுக்​குச்செல்​லும் பாத​யாத்​திரை குழுவை நடத்தி வந்​தார். நீதி​மன்​றம் உத்​தர​விட்​டும் தீபம் ஏற்ற அரசு மறுக்​கிறதே என்று அடிக்​கடி என்​னிடம் வருத்​தப்​பட்டு கூறி வந்​தார். நாங்​கள் மகனை இழந்து தவிக்​கிறோம்” என்​றார்.

பூர்​ணசந்​திரன் சித்தி மீனாட்சி மற்​றும் உறவினர்​கள் கூறும்​போது, “திரு​வண்​ணா​மலை​யில் மலை உச்​சி​யில் கார்த்​திகை தீபம் ஏற்​று​வதை அடி​வாரத்​தில் இருக்​கும் அனை​வரும் பார்ப்​பது​போல, திருப்​பரங்​குன்​றம் மலை உச்​சி​யில் தீபம் ஏற்​றி​னால் மதுரை மக்​கள் அனை ​வரும் பார்க்​கலாம் என அடிக்​கடி பூர்ண சந்​திரன் கூறி வந்​தார்.

அவரது கனவு நிறைவேற​வில்லை என்​றால், நாங்​களும் அதே முடிவை எடுப்​போம். எங்​களது குடும்​பத்​தினர் திமுகவைச் சேர்ந்​தவர்​கள். ஆனால், இது​வரை அமைச்​சர், ஆட்​சி​யர் மற்​றும் ஆளுங்​கட்​சி​யைச் சேர்ந்த யாரும் வரவில்லை” என்​றனர்.

அரசின் வீண் பிடி​வாதம்: பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், மத்​திய அமைச்​சர் எல்​.​முரு​கன், பாஜக மாநில முன்​னாள் தலை​வர்​கள் அண்​ணா​மலை, தமிழிசை சவுந்​தர​ராஜன், இந்து முன்​னணி மாநிலத் தலை​வர் காடேஸ்​வரா சுப்​பிரமணி​யம், இந்து மக்​கள்கட்சி தலை​வர் அர்​ஜுன் சம்​பத் உள்​ளிட்​டோர் வெளி​யிட்​டுள்ள இரங்​கல் செய்​தி​யில், “நீதி​மன்​றம் உத்​தர​விட்ட பிறகும்​கூட, அரசி​யல் காழ்ப்​புணர்ச்​சிக்​காகத் தீபம் ஏற்ற மறுத்​து, திமுக அரசு வீண் பிடி​வாதம் பிடிக்​கிறது. தீக்​குளித்து உயி​ரிழந்த பூர்​ணசந்​திரன் குடும்​பத்​தினருக்கு ஆழ்ந்த இரங்கல்” என்று தெரி​வித்​துள்​ளனர்​.

<div class="paragraphs"><p>பூர்ணசந்திரன் | மதுரையில் பூர்ண சந்திரனுக்கு இரங்கல் தெரிவித்து பாஜகவினர் ஒட்டிய போஸ்டர்.</p></div>
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 20 டிசம்பர் 2025

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in