புதிய தொழில் திட்டங்களுக்கு 21 நாட்களுக்குள் ஒப்புதல்: நிதித் துறை செயலர் எம்.ஏ.சித்திக் தகவல்

தமிழக அரசின் புதிய திட்டம் விரைவில் அறிமுகம்
நிதித் துறை செயலர் எம்.ஏ.சித்திக்

நிதித் துறை செயலர் எம்.ஏ.சித்திக்

Updated on
1 min read

சென்னை: பு​திய தொழில் திட்​டங்​களுக்கு 21 நாட்​களுக்​குள் ஒப்​புதல் அளிக்​கும் புதிய திட்​டத்தை தமிழக அரசு விரை​வில் அறி​முகம் செய்ய உள்​ள​தாக நிதித் துறை செயலர் எம்​.ஏ.சித்​திக் தெரி​வித்​தார்.

இந்​திய தொழில் கூட்​டமைப்​பின் தமிழ்​நாடு கிளை சார்​பில் ‘எதிர்​காலத்​துக்​குத் தேவை​யான நிதி, நிர்​வாகம், வளர்ச்சி மற்​றும் புதுமை கண்​டு​பிடிப்​பு’ என்ற தலைப்​பிலான நிதி மாநாடு சென்​னை​யில் நடை​பெற்​றது. தொழில் நிறு​வனங்​களின் தலைமை நிதி அலு​வலர்​கள், நிதித் துறை உயர் அதி​காரி​கள் பங்​கேற்ற இந்த மாநாட்​டில் தமிழக நிதித் துறை செயலர் எம்​.ஏ.சித்​திக் பேசி​ய​தாவது:

நாம் கொண்​டுள்ள தொழில் துறை இலக்கு என்​பது தொழில் நிறு​வனங்​களின் தொழில் திறனை அடிப்​படை​யாக கொண்டு அமைந்​திருக்க வேண்​டும். நல்​லாட்சி தரவேண்​டும் என்ற முதல்​வரின் தொலைநோக்கு சிந்​தனை​யின்​கீழ் அதி​காரக் கட்​டுப்​பாடு​கள், ஊழல், நிர்​வாக தாமதங்​கள் ஆகிய​வற்றை அரசு நீக்கி வரு​கிறது.

அந்த வகை​யில், புதிய தொழில் திட்​டங்​களுக்கு விண்​ணப்​பித்த 21 நாட்​களுக்​குள் ஒப்​புதல் அளிக்​கும் புதிய திட்​டத்தை தமிழக அரசு விரை​வில் அறி​முகம் செய்ய உள்​ளது. இதன்​படி, புதிய தொழில் திட்​டங்​களுக்கு ஒப்​புதல் கோரி விண்​ணப்​பித்​து, 21 நாட்​களில் நடவடிக்கை ஏதும் எடுக்​கப்​ப​டா​விட்​டால் அத்​திட்​டத்​துக்கு ஒப்​புதல் அளிக்​கப்​பட்​ட​தாகவே கருதப்​படும். அரசு நிர்​வாகத்​தில் இந்த புதிய நடை​முறை மிகப்​பெரிய முடி​வாக இருக்​கும்.

மேலும், புதிய முயற்​சி​யாக தலை​மைச் செயலர் தலை​மை​யில் தமிழ்​நாடு முதலீட்​டாளர் மேம்​பாட்டு ஆணை​யம் அமைக்​கப்​பட்டு வரு​கிறது. இந்த ஆணை​யம் ரூ.200 கோடி முதலீட்​டுக்கு மேற்​பட்ட திட்​டங்​கள் அல்​லது 5 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட வேலை​வாய்ப்​பு​கள் உரு​வாக்​கக்​கூடிய திட்​டங்​களைக் கண்​காணித்து அரசுத் துறை​களுக்கு இடையி​லான தடைகளை நீக்க உதவி செய்​யும்.

அரசு நிர்​வாகத்​தில் ஒப்​பந்​தப்​புள்ளி கட்​டுப்​பாடு​கள் நீக்​கப்​பட்​டும், திறந்​தவெளி போட்​டியை ஊக்​கு​வித்​தும் மாநில கொள்​முதல் விதி​முறை​கள் முற்​றி​லும் சீரமைக்​கப்​பட்​டுள்​ளன. இத்​தகைய நடவடிக்​கைகள் மூலம் இந்த நிதி ஆண்​டில் முதலீட்​டுச் செல​வினத்​தில் 10 சதவீதத்​துக்​கும் மேல் நிதியை சேமிக்க முடி​யும் என எதிர்​பார்க்​கிறோம். இவ்​வாறு அவர் பேசி​னார்.

சிஐஐ தமிழ்​நாடு துணைத் தலை​வர் முரு​கவேல் ஜானகி​ராமன் பேசும்​போது, ‘‘பு​தி​தாக ஆட்​சிப் பொறுப்​புக்கு வந்​துள்ள தவெக அரசு உள்​கட்​டமைப்பு மேம்​பாட்​டுக்கு மிக முக்​கிய​மாக, புதிய வி​மான நிலை​யத் திட்​டத்​துக்கு முன்​னுரிமை அளிக்​க வேண்​டும்​’’ என்​று வேண்​டு​கோள்​ விடுத்தார்​.

<div class="paragraphs"><p>நிதித் துறை செயலர் எம்.ஏ.சித்திக்</p></div>
மாணவர்கள் போராடத் தடை: சுற்றறிக்கையை திரும்பப் பெற்றது கல்லூரிக் கல்வி இயக்ககம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in