மகளிர் மசோதாவை தோற்கடித்த திமுகவுக்கு வாக்களிக்க வேண்டாம்: அண்ணாமலை வேண்டுகோள்

தருமபுரி பிரச்சார பொதுக்கூட்டத்தில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்றார்.

தருமபுரி பிரச்சார பொதுக்கூட்டத்தில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்றார்.

Updated on
1 min read

தருமபுரி: மகளிருக்​கான இட ஒதுக்​கீடு மசோ​தாவை தோற்​கடித்த திமுக கூட்​ட​ணிக்கு பெண்​கள் வாக்​களிக்க வேண்​டாம் என தரு​மபுரி​யில் அண்​ணா​மலை வேண்​டு​கோள் விடுத்​தார்.

தேசிய ஜனநாயக கூட்​டணி வேட்​பாளர்​களை ஆதரித்து தரு​மபுரி​யில் பாஜக முன்​னாள் மாநிலத் தலை​வர் அண்​ணா​மலை பேசி​ய​தாவது: தமிழகத்​தில் 2021-ல் திமுக ஆட்​சிக்கு வந்​ததும் கோவை​யும், தரு​மபுரி​யும் பழி​வாங்​கப்​பட்​டது. கரோனா தொற்​றுக்கு மருந்து கொடுக்​க​வில்​லை. மக்​கள் வீதி​யில் இறங்கி போராடிய பிறகு தான் மருந்து கொடுக்க முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் கோவை வந்​தார். இவ்​விரு மாவட்​டங்​களில் திமுக​வுக்கு வெற்றி கிடைக்​காத​தால் இரு மாவட்​டங்​களை​யும் புறக்​கணித்​தனர்.

பெண்​களுக்கு 33 சதவீத இட ஒதுக்​கீடு வழங்க வகை செய்​யும் சட்​டத் திருத்த மசோ​தாவை பிரதமர் மோடி கொண்டு வந்​தார். அந்த மசோதா திட்​ட​மிட்டு தோற்​கடிக்​கப்​பட்​டுள்​ளது. மசோ​தாவுக்கு எதி​ராக வாக்​களித்த திமுக​வுக்கு பெண்​கள் யாரும் வாக்​களிக்​காதீர்​கள். இந்​தி​யா​வில் 1973-ல் தான் இறு​தி​யாக தொகு​தி​கள் மறு​வரையறை நடந்​தது.

525 ஆக இருந்த தொகு​தி​கள் 545 ஆக உயர்த்​தப்​பட்​டன. அப்​போது தமிழகத்​துக்கு எம்​.பி. தொகு​தி​கள் கூடு​தலாக வேண்​டாம் என்று முன்​னாள் முதல்​வர் கருணாநிதி தெரி​வித்​தார். தற்​போது 39 மக்​களவை தொகு​தி​கள் 59 ஆக மாற உள்ள சூழலில், மு.க.ஸ்​டா​லின் தமிழகத்​தின் எம்​.பி. தொகு​தி​கள் அதி​கரிக்க வேண்​டாம் என்​கிறார்.

திமுக​வின் 5 ஆண்டு கால ஆட்​சி​யில் பெண்​கள், குழந்​தைகளுக்கு எதி​ரான குற்​றங்​கள் பல மடங்கு பெரு​கி​யுள்​ளது. சரித்​திரத்​தில் இது​போன்ற மோச​மான ஆட்​சியை பார்த்​த​தில்​லை.. தமிழகத்​துக்கு பிரதமர் மோடி தேர்​தல் பிரச்​சா​ரத்துக்கு வரும்​போது கூட்​டணி கட்​சி​யைச் சேர்ந்த அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி அவருடன் இணைந்து ஒரே மேடை​யில் பிரச்​சா​ரம் செய்​கிறார்.

ஆனால், ராகுல்​காந்தி தமிழகத்​துக்கு பிரச்​சா​ரத்​துக்கு வரும்​போது கூட்​ட​ணி​யில் இருக்​கும் திமுக​வின் தலை​வர் ஓரிடத்​தில் பிரச்​சா​ரத்​தில் இருக்​கிறார். இரு​வரும் இணைந்து ஏன் பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட​வில்​லை, அவர்​களது பொருந்​தாதக் கூட்​டணி எந்த நேரத்​தி​லும் உடை​யும். இவ்​வாறு பேசி​னார். கூட்​டத்​தில், எம்​எல்​ஏ-க்​கள் வெங்​கடேஸ்​வரன், கோவிந்த​சாமி மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்​.

<div class="paragraphs"><p>தருமபுரி பிரச்சார பொதுக்கூட்டத்தில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். </p></div>
“ஸ்டாலினை பணியவைக்க மோடி, அமித் ஷாவால் முடியாது” - திருச்சியில் ராகுல் காந்தி பேச்சு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in