பொருளாதார வளர்ச்சி, வணிகம் என்ற பெயரில் பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை அழிக்க அனுமதிக்க கூடாது: அன்புமணி வலியுறுத்தல்

பொருளாதார வளர்ச்சி, வணிகம் என்ற பெயரில் பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை அழிக்க அனுமதிக்க கூடாது: அன்புமணி வலியுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: பொருளா​தார வளர்ச்​சி, வணி​கம் என்ற பெயரில் பள்ளிக்கரணை சதுப்​புநிலத்தை அழிக்க அனு​ம​திக்​கக் கூடாது என தமிழக அரசுக்​கு, பாமக தலை​வர் அன்​புமணி வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

இதுதொடர்​பாக, அவர் வெளி​யிட்ட அறிக்​கை: ஒரு காலத்​தில் 15 ஆயிரம் ஏக்​கர் பரப்​பள​வில் விரிந்து கிடந்த பள்​ளிக்​கரணை சதுப்பு நிலம், ஆக்​கிரமிப்​பு​கள் காரண​மாக இப்​போது 1,725 ஏக்​க​ராக சுருங்​கி​விட்​டது.

இந்த சீரழிவை தடுத்து நிறுத்​து​வதற்​காக, பள்​ளிக்​கரணை சதுப்பு நிலம் ராம்​சார் ஈரநில​மாக 2022-ம் ஆண்டு அறிவிக்​கப்​பட்​டது. இதையடுத்​து, அதன் எல்​லைகளை​ வரையறுத்​து, சென்னை பெருநகர வளர்ச்சி குழு​மத்​திடம், ஈரநிலங்​கள் ஆணை​யம் தெரி​வித்​திருக்க வேண்​டும். ஆனால், தமிழக அரசும், ஈர நிலங்​கள் ஆணை​ய​மும் அதை செய்​ய​வில்​லை.

இதற்கு காரணம், தங்​களுக்கு கிடைக்​கும் ஆதா​யங்​களுக்​காக பள்​ளிக்​கரணை சதுப்​புநில பகு​தி​களில் கட்​டு​மானப் பணி​கள் தொடர வேண்​டும் என ஆட்​சி​யாளர்​கள் நினைத்​தது தான்.

இதற்​கிடையே, இயற்கை ஆர்​வலர்​கள் தொடர்ந்த வழக்​கில், தென்​னிந்​திய பசுமைத் தீர்ப்​பா​யம் பள்​ளிக்​கரணை சதுப்பு நிலத்தை சுற்றி 1 கிமீ தொலை​வுக்கு கட்​டு​மான பணி​களுக்கு தடையை விதித்​தது.

இந்​நிலை​யில், இந்த தடை​யால் புதிய கட்​டு​மானங்​களை மேற்​கொள்ள முடி​யாமல் ரூ.72 ஆயிரம் கோடிக்கு பொருளா​தார நடவடிக்​கைகள் முடங்கி கிடப்​ப​தாக​வும், அந்த தடையை அரசு நீக்க வேண்​டும் என்​றும் கிரெ​டாய் உள்​ளிட்ட ரியல் எஸ்​டேட் சங்​கங்​கள் வலி​யுறுத்தி வரு​கின்​றன.

பொருளா​தா​ரம் என்ற இனிப்பு பூசி முன்​வைக்​கப்​பட்​டுள்ள இந்த கோரிக்கை மிக​வும் ஆபத்​தானது. கட்​டு​மான நிறு​வனங்​கள் மேற்​கொள்​ளும் இச்​ச​தித் திட்​டத்​துக்கு தமிழக அரசு இரை​யாகி​விட கூடாது.

பள்​ளிக்​கரணை ராம்​சார் சதுப்பு நிலத்தை, வணி​கம் என்ற பெயரில் அழிக்க அனு​ம​திக்​கக் கூடாது. எத்​தனை அழுத்​தங்​கள் வந்​தா​லும் பள்​ளிக்​கரணை சதுப்பு நிலத்தை தமிழக அரசு பாது​காக்க வேண்​டும்.

முதல்​கட்​ட​மாக, பள்​ளிக்​கரணை சதுப்பு நிலத்​தின் எல்​லைகளை வரையறுத்து அறி​வித்​து, அதை சென்னை 2-வது பெருந்​திட்​டத்​தில் சேர்க்க வேண்​டும். இவ்​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.

பொருளாதார வளர்ச்சி, வணிகம் என்ற பெயரில் பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை அழிக்க அனுமதிக்க கூடாது: அன்புமணி வலியுறுத்தல்
பள்ளி, கல்லூரிகளில் முதல்வரின் பிறந்தநாளை கொண்டாடிய தவெகவினர் மீது நடவடிக்கை கோரி வழக்கு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in