துபாயில் மீண்டும் தாக்குதல் நடந்ததால் வான்வழி மூடல்: சென்னையில் 700 பயணிகள் தவிப்பு

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

சென்னை: து​பா​யில் மீண்​டும் தாக்​குதல் காரண​மாக, சென்​னை​யில் இருந்து துபாய் புறப்பட வேண்​டிய 3 விமானங்​களின் சேவை​கள் பாதிக்​கப்​பட்​ட​தால், 700-க்​கும் மேற்​பட்ட பயணி​கள் சென்​னை​யில் தவித்து வரு​கின்​றனர்.

துபா​யில் இருந்து எமிரேட்ஸ் ஏர்​லைன்ஸ் விமானம் 242 பயணி​களு​டன் சென்​னைக்கு நேற்று அதி​காலை 2.15 மணிக்கு வந்​தது. அந்த விமானம் மீண்​டும் அதி​காலை 4 மணிக்கு சென்​னை​யில் இருந்து 206 பயணி​களு​டன் துபாய்க்கு புறப்​பட்​டது. விமானம், குஜ​ராத் கடல் எல்​லை​யில் சுமார் 38 ஆயிரம் அடி உயரத்​தில் பறந்து சென்று கொண்​டிருந்த போது, துபாய் விமான நிலை​யம் அருகே மீண்​டும் ஏவு​கணை தாக்​குதல் நடப்​ப​தாக​வும், இதனால் வான்​வழி தற்​காலிக​மாக மூடப்​படு​வ​தாக​வும் விமானிக்​கு அவசர தகவல் கிடைத்​த​தாக கூறப்​படு​கிறது.

இதையடுத்​து, துபாய், சென்னை விமான நிலைய கட்​டுப்​பாட்டு அறை​களோடு விமானி அவசர​மாக தொடர்பு கொண்​டார். விமானத்தை சென்​னைக்கே திருப்பி கொண்டு சென்று தரை இறக்​கு​மாறும், மறு உத்​தரவு வரும் வரை சென்​னை​யில் இருந்து விமானம் வர வேண்​டாம் என்றும் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. இதைத் தொடர்ந்​து,காலை 8.20 மணிக்கு விமானம் சென்​னை​யில் தரை​யிறங்​கியது.

பயணி​கள் அனை​வரும் சென்​னை​யில் பல்​வேறு ஓட்​டல்​களில் தங்க வைக்​கப்​பட்​டுள்​ளனர். அதேபோல, 258 பேருடன் காலை 9.50 மணிக்கு புறப்பட வேண்டிய எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம், காலை 10.30 மணிக்கு 186 பயணி​களு​டன் செல்ல வேண்​டிய ஏர் இந்​தியா எக்​ஸ்​பிரஸ் சிறப்பு விமான​மும் துபாய் செல்லவில்​லை.

இதனால், 700-க்​கும் மேற்​பட்ட பயணி​கள் துபாய் செல்லமுடி​யாமல் தவிக்கின்​றனர். துபா​யில் நிலைமை சீராகி, வான்​வழி திறக்​கப்​பட்டதும் இந்தவிமானங்​கள் இயக்​கப்​படும் என்று அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
5 நாட்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல்: அர்ச்சனா பட்நாயக் தகவல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in