தமிழகம் முழுவதும் 35 ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தம் - விரைவில் வெளியாகிறது அறிவிப்பு

தமிழகம் முழுவதும் 35 ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தம் - விரைவில் வெளியாகிறது அறிவிப்பு
Updated on
1 min read

சென்னை: தமிழகம் முழு​வதும் 35 ரயில்​களுக்​குக் கூடு​தல் நிறுத்​தங்​கள் அளிக்க இந்​திய ரயில்வே உத்​தர​விட்​டுள்​ளது.

இது தொடர்​பாக அறி​விப்பு விரை​வில் வெளி​யாக​வுள்​ளது. தெற்கு ரயில்​வே​யில் முக்​கிய வழித்​தடங்​களில் ஓடும் விரைவு ரயில்​கள், பாசஞ்​சர் ரயில்​களுக்கு பயணி​களின் தேவை அடிப்​படை​யில் கூடு​தல் நிறுத்​தங்​களை வழங்க பயணி​கள், சமூக ஆர்​வலர்​கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரு​கின்​றனர்.

இதற்​கிடை​யில் 29 விரைவு ரயில்​களுக்​கும், 6 பாசஞ்​சர் ரயில்​களுக்​கும் கூடு​தல் நிறுத்​தங்​களை வழங்க ரயில்வே வாரி​யம் ஒப்​புதல் அளித்​துள்​ளது. சென்னை - கோயம்​புத்​தூர் கோவை விரைவு ரயில், சென்னை - பெங்​களூரு டபுள் டெக்​கர் ரயில் ஆகிய ரயில்​களுக்கு திரு​வள்​ளூர் நிலை​யத்​தில் நிறுத்​தம் வழங்​கப்​பட​வுள்​ளது.

சென்னை - ஜோலார்​பேட்டை விரைவு ரயில் இனி அம்​பத்​தூரில் நின்று செல்​லும். அதே​நேரம் சென்னை எழும்​பூர் - சத்​ரபதி சிவாஜி மகா​ராஜ் டெர்​மினஸ் விரைவு ரயிலுக்கு அரக்​கோணத்​தில் நிறுத்​தம் வழங்​கப்​பட​வுள்​ளது.

மங்​களூர் - சென்னை சென்ட்​ரல் விரைவு ரயில், திரு​வனந்​த​புரம் - சென்னை சென்ட்​ரல், அகம​தா​பாத் - சென்னை சென்ட்​ரல், புதுச்சேரி - காச்​சிகு​டா, செங்​கல்​பட்டு - காச்​சிகுடா உள்​ளிட்ட ரயில்​களுக்கு பெரம்​பூரில் நிறுத்​தம் வழங்​கப்​பட​வுள்​ளன.

நிறுத்​தம் வழங்​கப்​பட​வுள்ள 29 விரைவு ரயில்​களில் மெயில், அதி​விரைவு, அந்த்​யோதயா ரயில் ஆகியவை அடங்​கும். இதுத​விர சென்னை - மும்​பை, சென்னை - விஜய​வா​டா, பெங்​களூரு - கன்​னி​யாகுமரி போன்ற நீண்ட தூர மாநிலங்​களுக்கு இடையே​யான ரயில் சேவை​களும் அடங்​கும். இதுத​விர, மெட்ரோ ரயில் இணைப்பு உள்ள விம்கோ நகரில் சென்னை - விஜய​வாடா பினாகினி விரைவு ரயில், விஜய​வாடா ஜன சதாப்தி விரைவு ரயில் மற்​றும் பித்​ரகுண்டா - சென்னை சென்ட்​ரல் பயணி​கள் ரயில் ஆகிய​வற்​றுக்கு நிறுத்​தம் வழங்​கு​வதும் அடங்​கும். சென்னை எழும்​பூர் - கன்​னி​யாகுமரி விரைவு ரயிலுக்கு கோவில்​பட்​டி​யில் நிறுத்​தம் வழங்​கப்​பட​வுள்​ளது.

இந்த நடவடிக்கை மூல​மாக, சென்னை சென்ட்​ரல், எழும்​பூர் ஆகிய ரயில் நிலை​யங்​களில் ஏற்​படும் நெரிசல் குறை​யும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இதுத​விர, பயணி​கள் முக்​கிய ரயில் முனை​யங்​களுக்​குப் பயணிக்​காமலேயே நீண்ட தூர ரயில்​களை எளி​தாக பிடிப்​ப​தற்கு உதவும்.

இதுகுறித்து ரயில்வே அதி​காரி ஒரு​வர் கூறுகை​யில், “இந்த புதிய நிறுத்​தங்​கள் அமல்​படுத்​தப்​படும் தேதி விரை​வில் அறிவிக்​கப்​படும்” என்று தெரி​வித்​தா​ர்.

தமிழகம் முழுவதும் 35 ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தம் - விரைவில் வெளியாகிறது அறிவிப்பு
“ஜல்லிக்கட்டை திமுக விழாவாக மாற்றிவிட்டனர்” - தமிழிசை கண்டனம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in