Published : 02 Oct 2017 07:10 AM
Last Updated : 02 Oct 2017 07:10 AM

மதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடக்கிறது

மதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள், உயர்நிலைக் குழு, ஆட்சிமன்றக் குழு அரசியல் ஆலோசனைக் குழு, அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள் கூட்டம் இன்று நடைபெறும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

தமிழ் ஈழ பிரச்சனை தொடர்பாக ஐநா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் பேசிவிட்டு, வைகோ நேற்று மாலை சென்னை திரும்பினார். இந்நிலையில் இன்று கூட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார்.

தாயகத்தில்..

இந்த சூழலில் மாவட்டச் செயலாளர்கள், உயர்நிலைக்குழு, ஆட்சிமன்றக்குழு அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள் கூட்டம் திங்கள்கிழமை காலை 11 மணிக்கு சென்னை தாயகம் அலுவலகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x