Published : 28 May 2023 07:39 PM
Last Updated : 28 May 2023 07:39 PM

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விஷ வண்டு கடித்ததில் விஏஓ உயிரிழப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விஷ வண்டு கடித்ததில் விஏஓ ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே முல்லை நகர் புதுத்தெருவை சேர்ந்தவர் இந்திராகாந்தி(54). இவரது கணவர் தங்கராஜ். இவர்களுக்கு முத்துமீனா என்ற மகளும், அரவிந்த் என்ற மகனும் உள்ளனர். அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றிய தங்கராஜ் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்து விட்டார். இந்திராகாந்தி ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மல்லி கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்தார்.

இன்று முல்லை நகரில் உள்ள தனது வீட்டில் தண்ணீர் தொட்டி நிறைந்து விட்டதா என பார்ப்பதற்காக மாடிக்கு சென்றார். அப்போது இந்திரா காந்தியை விஷ வண்டு கடித்துள்ளது. இதையடுத்து அவரை ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சிவகாசி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, இந்திராகாந்தி உயிரிழந்தார். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x