Published : 28 May 2023 06:34 AM
Last Updated : 28 May 2023 06:34 AM

தமிழகத்தில் ‘கேலோ’ போட்டிகள் - பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர், உதயநிதி நன்றி

சென்னை: ‘கேலோ இந்தியா' விளையாட்டு போட்டிகளை தமிழகத்தில் நடத்த அனுமதி அளித்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் தெரிவித்துள்ளதாவது: முதல்வர் ஸ்டாலின்: 2023-ம்ஆண்டு ‘கேலோ இந்தியா’ விளையாட்டு போட்டிகளை தமிழகத்தில் நடத்த வேண்டும் என்ற எனதுவேண்டுகோளை ஏற்றுக்கொண்டதற்காக, பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி.

விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்: முதல்வர் ஸ்டாலினின் வேண்டுகோளை ஏற்று, ‘கேலோ இந்தியா’போட்டிகளை நடத்த தகுதியான மாநிலமாக தமிழகம் தேர்ந்தெடுக்கப்பட்டதில் மகிழ்ச்சி. இதற்காகபிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x