Published : 11 Oct 2017 05:51 AM
Last Updated : 11 Oct 2017 05:51 AM

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் இனிப்பு கிப்ட் பாக்ஸ்: நாளை முதல் விற்பனை தொடக்கம்

தீபாவளியை முன்னிட்டு 8 வகையான இனிப்புகள் அடங்கிய ஆவின் நிறுவனத்தின் கிப்ட் பாக்ஸ் நாளை முதல் விற்பனைக்கு வருகிறது.

இதுதொடர்பாக ஆவின் நிறுவன அதிகாரிகள் கூறிய தாவது:

தீபாவளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஆவின் பாலகங்களில் கிப்ட் பாக்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 650 கிராம் எடையில் மொத்தம் 8 வகை இனிப்புகள் இந்த கிப்ட் பாக்ஸில் இருக்கும். இதற்கு அதிகபட்ச சில்லறை விலையாக ரூ.500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆவின் பாலகங்களில் நாளை முதல் இவை கிடைக்கும்.

மேலும், தீபாவளியை முன்னிட்டு சாக்லேட் பர்பி, நட்ஸ் அல்வா, முந்திரி அல்வா, பாதாம் அல்வா, முந்திரி கேக், முந்திரி பர்பி, பாதாம் பர்பி, பேரீச்சம்பழம் கோவா என 8 வகையான சிறப்பு இனிப்புகளை ஆவின் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இனிப்பு வகைகள் அனைத்தும் சென்னையில் உள்ள 50 ஆவின் பாலகங்களில் கிடைக்கும். மொத்தமாக ஆவின் இனிப்புகள் தேவைப்படுபவர்கள் ஆவின் வட்டார அலுவலகங்கள், பால் நுகர்வோர் கூட்டுறவு சங்கங்கள், நந்தனம் ஆவின் அலுவலகத்தில் முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்.

ஆவின் நிறுவனத்தின் தீபாவளி இனிப்பு வகைகளை முதன்முறையாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட தாலுகா தலைமை இடங்களில் தயாரித்து விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட, ஒன்றியங்களைப் பொறுத்தவரை அக்டோபர் 15, 16, 17 ஆகிய 3 நாட்களுக்கு அனைத்து மாவட்ட தாலுகா தலைமை அலுவலகங்களிலும் இனிப்பு, கார வகைகள் கிடைக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x