Published : 04 Oct 2017 03:50 PM
Last Updated : 04 Oct 2017 03:50 PM
டெங்கு காய்ச்சல் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலையில் பூந்தமல்லியில் பொறியியல் கல்லூரி மாணவி ஒருவர் டெங்கு காய்ச்சல் காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
டெங்கு காய்ச்சல் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலையில் பூந்தமல்லியில் பொறியியல் கல்லூரி மாணவி ஒருவர் டெங்கு காய்ச்சல் திருவள்ளுர் மாவட்டம் பூந்தமல்லியில் வசித்த பொறியியல் கல்லூரி மாணவி ஷெரின் பானு காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். தொடர் காய்ச்சல் காரணமாக அவரை பரிசோதனை செய்ததில் டெங்கு இருப்பது உறுதியானது.
காய்ச்சலில் பாதிக்கப்பட்டிருந்த ஷெரின் பானு போரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார், இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதே போன்று திருப்போரூரில் 2 வயது குழந்தை லேகாஸ்ரீ டெங்கு பாதிப்பால் உயிரிழந்தது.
பூந்தமல்லி நகராட்சியில் டெங்கு காய்ச்சலுக்கு பலியாவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சமீபத்தில் கும்மிடிப்பூண்டி காட்டுக்கொல்லை பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி கலையரசி டெங்குவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT