Published : 01 Oct 2017 10:16 AM
Last Updated : 01 Oct 2017 10:16 AM

மரத்தில் கார் மோதி 3 பேர் பலி

புதுக்கோட்டை அருகே நேற்று மரத்தின் மீது கார் மோதி 3 இளைஞர்கள் உயிரிழந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் மேலத்தானியத்தைச் சேர்ந்தவர்கள் உதுமான் மகன் அசாருதீன்(21), இக்பால் மகன் ராசீப்அலி(28), அப்துல்லா மகன் சதாம் உசேன்(21). இவர்களில் அசாருதீனைத் தவிர மற்ற இருவர் வெளிநாட்டில் இருந்து அண்மையில் ஊருக்கு வந்துள்ளனர்.

நண்பர்களான இவர்கள் மூவரும் நேற்று காரில் புதுக்கோட்டை சென்றுவிட்டு மீண் டும் ஊருக்கு புறப்பட்டுள்ளனர்.

செல்லுகுடி பிரிவு சாலை அருகே சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், புளியமரத்தின் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அசாருதீன், ராசீப்அலி, சதாம்உசேன் ஆகிய மூவரும் அந்த இடத்திலேயே இறந்தனர்.

இது குறித்து திருக்கோகர்ணம் போலீஸார் விசாரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x