Published : 06 Sep 2017 09:53 AM
Last Updated : 06 Sep 2017 09:53 AM
கொங்குநாடு ஜனநாயகக் கட்சியை பாஜகவுடன் இணைத்துவிட்டதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.கே.நாகராஜ் தெரிவித்தார்.
கோவை பாஜக அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜகவில் இணைந்த ஜி.கே.நாகராஜ், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நாட்டின் இறையாண்மை, கலாச்சாரம், பண்பாட்டுக்கு உரிய முக்கியத்துவம் அளித்து, தீவிரவாதத்தை ஒடுக்க கடும் முயற்சியை பாஜக அரசு மேற்கொண்டுள்ளது.
திராவிடக் கட்சிகளிடம் இருந்து தமிழ்நாட்டை மீட்க பாஜகவால் மட்டுமே முடியும். எனவே, தமிழகத்தின் நலன் கருதியும், கொங்குமண்டல மக்களின் நலன் கருதியும் பாஜகவில் இணைகிறோம். கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் பாஜக தலைவர்கள் முன்னிலையில் இணையும் விழா பிரம்மாண்டமாக நடத்தப்படும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT