Published : 26 Sep 2017 09:18 PM
Last Updated : 26 Sep 2017 09:18 PM
வளிமண்டலத்தில் மேல் அடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளதால் வடதமிழகத்தின் சில இடங்களில் இன்று கனமழை மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
இது குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறுகையில், ''மத்திய வங்கக் கடலில் நிலவிய வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி, மேற்கு திசை நோக்கி நகர்ந்து ஆந்திர பகுதியை ஒட்டி நிலவி வருகிறது. இதன் காரணமாக வடதமிழகத்தின் ஒரு சில இடங்களிலும் தென்தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் மழை பெய்யும்.
அதேபோல வடதமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொருத்தவரையில் வானம் மேகமூட்டமாக இருக்கும். சில இடங்களில் மழை பெய்யும்'' என்று பாலச்சந்திரன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT