Published : 30 Sep 2017 06:41 PM
Last Updated : 30 Sep 2017 06:41 PM
அரசியலுக்கு அப்பாற்பட்டு பள்ளி மாணவர்களை எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கு அழைத்து வந்தோம். அதில் அரசியலே கிடையாது என்று மக்களவை துணை சபாநாயகரும், அதிமுக மூத்த தலைவருமான மு.தம்பிதுரை கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் கரூரில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''பள்ளி மாணவ, மாணவிகள் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிற்கு அழைத்து செல்லக்கூடாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளதில் நீதிமன்றம் என்ன கூறுகின்றதோ, அதை நாங்கள் செய்து கொள்கின்றோம். மாணவ, மாணவிகளுக்கு நல்லது செய்து தரவேண்டும் என்பதற்காக அரசியலுக்கு அப்பாற்பட்டு பள்ளி குழந்தைகளை அழைத்து வந்தோம். அதில் அரசியலே கிடையாது.
எப்படி படிக்கவேண்டும், எப்படி எழுதவேண்டும் என்று எடுத்துக் கூறப்பட்டது. நீதிமன்ற தடைக்கு தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் ஆளுங்கட்சி சிறப்பாக செயல்பட்டால் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு மற்றும் குறைகளை சொல்வதே அரசியல்.
பசுபதிபாளையம் மற்றும் பெரியகுளத்துப்பாளையம் ரயில்வே குகை வழிப்பாதை திட்டம் இப்பகுதி மக்களின் 30 ஆண்டு கால கனவு. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் இக்கனவு நனவாகியுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அம்மாவின் திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.
அக். 4-ம் தேதி கரூரில் நடைபெற உள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. சுமார் 50,000த்திற்கும் மேற்பட்டோர் அமர்ந்து காணும் வகையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன'' என்று தம்பிதுரை தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT