Published : 01 Sep 2017 09:54 AM
Last Updated : 01 Sep 2017 09:54 AM

நதிகளை காக்க ஜக்கி வாசுதேவ் வாகன பேரணி

நதிகளை காக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக விழிப்புணர்வு வாகனப் பேரணியை ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் வரும் 4-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்குகிறார். 16 மாநிலங்கள் வழியாகச் சென்று அக்.2-ம் தேதி டெல்லியில் பேரணியை அவர் நிறைவு செய்கிறார்.

அழிந்து வரும் நதிகளை மீட்டு, மீண்டும் பெருக்கெடுத்து ஓடச்செய்யும் வகையில் 'நதிகளை மீட்போம்' என்னும் தேசிய அளவிலான இயக்கம் சார்பில் நாடு முழுவதும் வாகனப் பேரணி நடத்தப்படுகிறது.

ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் செப்.4-ம் தேதி முதல் 30 நாட்கள் நாடு முழுவதும் சுமார் 7 ஆயிரம் கிமீ தூரம் வாகனத்தில் பயணம் மேற்கொள்கிறார். கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரத்தில் நடைபெறும் தொடக்க நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், சுஹாசினி மணிரத்னம் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x