Published : 10 Sep 2017 12:04 PM
Last Updated : 10 Sep 2017 12:04 PM

மணலி அண்ணா நகரில் மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கணவர் கைது

மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கணவர் கைது செய்யப்பட்டார்.

மணலி அண்ணா நகரை சேர்ந்தவர் டார்வின் (32). கிண்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் வியாசர்பாடி பக்தவச்சலம் காலனியைச் சேர்ந்த தேவி என்பவருக்கும் கடந்த 2016-ல் திருமணம் நடந்தது.

இந்நிலையில் டார்வினுக்கும், தண்டையார் பேட்டையை சேர்ந்த பெண் ஒருவருக்கும் கூடா நட்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த தேவி கணவரின் கூடா நட்பு குறித்தும், அவர் கொடுமை படுத்துவதாக கூறியும் கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

போலீஸார் தீவிர விசாரணை

இதுகுறித்து மணலி போலீஸார் வழக்கு பதிந்து தேவியை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் டார்வினை நேற்று கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x