Published : 11 Sep 2017 10:04 PM
Last Updated : 11 Sep 2017 10:04 PM

அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்குத் தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

 

அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்த தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்ற அமர்வு மறுத்துவிட்டது. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடத்த தடையில்லை என்றும் உத்தரவிட்டுள்ளது.

பொதுக்குழுக் கூட்டத் தீர்மானங்கள் அனைத்தும் (பொதுக்குழு செல்லாது என்று தீர்ப்பு வந்தால் தீர்மானங்களும் செல்லாது) வழக்கின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என்ற நிபந்தனையுடன் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு மூல வழக்கை அக்டோபர் 23-க்கு ஒத்தி வைத்துள்ளது, அன்றைய தினம் அனைத்துத் தரப்பினரும் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது

அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதிகள், ராஜிவ் ஷக்தர், அப்துல் குத்தூஸ் அமர்வு விசாரித்தது. விசாரணை முடிவில் இரவு 7-15 க்கு தீர்ப்பை அறிவிப்பதாக இருந்த நிலையில் நீண்ட நேர காத்திருப்புக்கு பின்னர் இரவு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்தது.

முன்னதாக...

அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் தலைமை அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதி, அதிமுக பொதுக்குழு, செயற்குழுக் கூட்டத்துக்கு தடை விதிக்க மறுத்ததோடு, மனுதாரர் எம்எல்ஏ வெற்றிவேல் நீதிமன்ற நேரத்தை வீணடித்ததாகக் கூறி அவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில் தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து எம்எல்ஏ வெற்றிவேல் மதியம் 1.30 மணியளவில் மீண்டும் மேற்முறையீடு செய்தார்.

இம்மேல் முறையிடு மனு நீதிபதிகள் ராஜிவ் சக்தர், அப்துல் குத்துஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது, தற்போது இந்த அமர்வு அதிமுக பொதுக்குழு கூட்டம் நாளை நடைபெறத் தடையில்லை என்று கூறி, தடைவிதிக்க மறுத்து உத்தரவிட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x