Published : 20 Jul 2017 08:48 AM
Last Updated : 20 Jul 2017 08:48 AM
புதுக்கோட்டையில் செய்தியாளர் களிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப் பினர் உ.வாசுகி கூறியது: நெடு வாசல், கதிராமங்கலம் பகுதி விவ சாயிகளுக்கு ஆதரவாக துண்ட றிக்கை விநியோகம் செய்த சேலத் தைச் சேர்ந்த கல்லூரி மாணவி வளர்மதியை தடுப்பு காவல் சட்டத்தில் தமிழக அரசு கைது செய்திருப்பது கண்டனத்துக்கு உரியது. விமர்சனம் செய்வோரை மிரட்டி பணியவைக்க தடுப்பு காவல் சட்டத்தை தமிழக அரசு தவறாக பயன்படுத்துகிறது.
அதிமுக அரசு ஊழல் செய்து வருகிறது என பல்வேறு தரப்பினர் விமர்சனம் செய்து வருகின்றனர். அதைத்தான் நடி கர் கமலஹாசனும் கூறினார். இதற்காக அவரை அமைச்சர்கள் தரம்தாழ்ந்து பேசுவதை ஏற்க முடியாது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT