Published : 03 Aug 2017 08:33 AM
Last Updated : 03 Aug 2017 08:33 AM
சென்னை பூந்தமல்லி அருகே மிகப்பெரிய அரங் கம் அமைத்து அதில் ‘பிக் பாஸ்’ என்ற தொலைக் காட்சி நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச் சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.
‘பிக் பாஸ்’ அரங்கத்தில் மும்பையைச் சேர்ந்த சலீம் முகமதுஷேக் என்பவர் பிளம்பராக இருந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு இவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிர் இழந்தார். இதுபற்றிய தகவல் அறிந்து நசரத்பேட்டை போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து, அவரது உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதுகுறித்து நசரத்பேட்டை போலீஸார் கூறும் போது, “வலிப்பு ஏற்பட்டு சலீம் முகமது ஷேக் இறந்த தாக பிக்பாஸ் நிகழ்ச்சி நிர்வாகிகள் தெரிவித் துள்ளனர். பிரேதப் பரிசோதனைக்கு பிறகே இறப்புக்கான காரணம் தெரியவரும்” என்றனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT