Published : 16 Mar 2023 01:44 PM
Last Updated : 16 Mar 2023 01:44 PM

1.50 லட்சம் குடும்பங்கள் காக்கப்பட்டுள்ளன - இன்னுயிர் காப்போம் திட்டம் குறித்து முதல்வர் நெகிழ்ச்சி

நேரில் சந்தித்து நலம் விசாரித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: இன்னுயிர் காப்போம் திட்டத்தில் இதுவரை 1.50 லட்சம் குடும்பங்கள் காக்கப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும்-48 திட்டத்தில் பனிமலர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 1,50,000 ஆவது பயனாளியை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இது குறித்து முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்," சொன்னதைச் செய்வது மட்டுமல்ல; சொல்லாமலும் செய்வோம். செய்கிறோம்!

தேர்தல் அறிக்கையில் சொல்லவில்லை. ஆனால் Golden Hours காலக்கட்டத்தில் மருத்துவ உதவி கிடைக்காமல் யாரும் பாதிக்கப்படக்கூடாதென்பதற்காக கடந்த 18-12-2021 அன்று இன்னுயிர் காப்போம் திட்டத்தை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனையில் தொடங்கி வைத்தேன்.

இந்தியாவிலேயே முதன்முதலாகத் தமிழ்நாட்டில் உருவான இந்தத் திட்டம், ஒரு முன்மாதிரி திட்டம்! இன்று அரிகிருஷ்ணன் என்பவர் 1,50,000-ஆவது பேராகப் பனிமலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பயனடைந்திருக்கிறார். ஒன்றரை இலட்சம் பேர் அல்ல; அத்தனை குடும்பங்கள் காக்கப்பட்டுள்ளன என்ற நெகிழ்வோடு இதனைப் பகிர்கிறேன்." இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x