Published : 02 Sep 2017 08:48 PM
Last Updated : 02 Sep 2017 08:48 PM
திருவல்லிக்கேணி எல்லீஸ் சாலை பகுதியில் குடிநீர் குழாய் பதிக்க தோண்டிய பள்ளத்தில் மண் சரிந்ததில் தொழிலாளி சிக்கிக்கொண்டார். பின்னர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
சென்னை திருவல்லிக்கேணி, எல்லீஸ் சாலை பகுதியில் உள்ள முக்தாருன்னிசா பேகம் தெருவில் கடந்த சில நாட்களாக புதிய குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது.
இதற்காக ஆளுயர அளவில் குழி தோண்டப்பட்டு குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இன்று பணி நடந்து கொண்டிருக்கும் போதே திடீரென பள்ளத்திற்குள் மண் சரிந்து மூடியது. இதில் பள்ளத்தில் இறங்கி வேலை செய்துக்கொண்டிருந்த தொழிலாளி குருசாமி என்பவர் மண்ணுக்குள் புதைந்தார்.
உடனடியாக அக்கம் பக்கமிருந்தவர்கள் போலீஸுக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தர விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் குருசாமியை மீட்டனர்.
உடனடியாக சிகிச்சைக்காக அவர் திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து திருவல்லிக்கேணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT