Published : 20 Sep 2017 07:43 AM
Last Updated : 20 Sep 2017 07:43 AM
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான வழக்கில் தமிழக நலனுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதிட்டதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து முத்தரசன் நேற்று வெளியிட்ட அறிக்கை:
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வெளியாகி 10 ஆண்டுகளாகியும் அதை ஏன் செயல்படுத்தவில்லை? காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை ஏன் அமைக்கவில்லை என பல்வேறு வினாக்களை உச்ச நீதிமன்றம் எழுப்பியுள்ளது.
இறுதி விசாரணை நிறைவுபெறும் நிலையில், நடுவர் மன்றத் தீர்ப்பை திருத்தியமைக்க நாடாளுமன்றத்துக்கு உரிமை உண்டு. காவிரி மேலாண்மை வாரியம், நதிநீர் ஒழுங்காற்றுக் குழு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் என எதிர்மறை கருத்துகளை மத்திய அரசு முன்வைத்துள்ளது.
இதன்மூலம் தமிழகத்தை வஞ்சித்து வரும் மத்திய அரசின் போக்கில் எந்த மாற்றமும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்றார்.
அன்புமணி விடுத்துள்ள அறிக்கையில், ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றத்தில் தமிழகம் தொடர்ந்த வழக்கில் வாதாடிய மத்திய அரசு வழக்கறிஞர், ‘‘காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை மாற்றவோ, திருத்தவோ நாடாளுமன்றத்துக்கு முழு அதிகாரம் உண்டு.
நடுவர் மன்றத் தீர்ப்பின்படி மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க முடியாது’’ என தெரிவித்துள்ளார். இது தமிழக நலனுக்கு எதிராக மத்திய அரசு வாதிட்டது அதிர்ச்சி அளிக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT