Published : 04 Sep 2017 11:04 AM
Last Updated : 04 Sep 2017 11:04 AM
நீலகிரி மாவட்டத்தில் பெய்த கன மழையால், மாயாறு நீர்வீழ்ச்சி யில் பெருக்கெடுத்தோடிய வெள்ளத்தை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
கடந்த சில நாட்களாக, மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. மாலை மற்றும் இரவு நேரங்களில் கன மழை பெய்து வந்த நிலையில், நேற்று முன்தினம் காலை முதல் கன மழை பெய்தது. இதனால், உதகையில் உள்ள கிரீன்ஃபீல்ட்ஸ், லோயர் பஜார், கூட்ஸ் ஷெட் சாலை, காந்தல் ஆகிய தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்தது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
யானை சவாரி ரத்து
இந்நிலையில், நேற்றும் மழை தொடர்ந்தது. முதுமலையில் பெய்த கன மழை காரணமாக நீர் நிலைகளில் நீர் வரத்து அதிகரித்தது. இதனால், முதுமலையின் மையப் பகுதியில் உள்ள மாயாறு நீர் வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதை சுற்றுலா பயணிகள் வெகுவாகக் கண்டு ரசித்தனர். கன மழையால், யானை சவாரி ரத்து செய்யப்பட்டது.
மழை அளவு (மி.மீ.)
நேற்று காலை நிலவரப்படி, மாவட்டத்தில் 415.30 மி.மீ. மழை பதிவானது.
கிளன்மார்கன் - 80, குன்னூர் - 25.50, கூடலூர் - 12, கேத்தி - 40, கோத்தகிரி - 22, நடுவட்டம் - 31, உதகை - 70.80, கல்லட்டி - 24, மேல் பவானி - 7, எமரால்டு - 14, அவலாஞ்சி - 16, கெத்தை - 9, கோடநாடு - 27, பர்லியாறு - 20, தேவாலா - 5.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT