Published : 13 Sep 2017 08:05 AM
Last Updated : 13 Sep 2017 08:05 AM

போலி முகநூல்: காவல் ஆணையரிடம் எஸ்.வி.சேகர் புகார்

தனது பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி, தவறான தகவல்களை பதிவிட்டு வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறை ஆணையரிடம் நடிகர் எஸ்.வி சேகர் புகார் மனு அளித்துள்ளார்.

சென்னை காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதனிடம், நடிகர் எஸ்.வி சேகர் நேற்று புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:

எனது பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. அதில் பல பதிவுகள் தவறான உள்நோக்கத்துடன் போடப்பட்டுள்ளன. என்னுடைய பொது வாழ்வுக்கும், என் அரசியல் சார்பு நிலைக்கும் களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் இவை பதிவிடப்பட்டுள்ளன.

ஆகவே அவற்றை நீக்கி, அதை பதிவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த புகார் மனு குறித்து விசாரணை நடத்த காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x