Published : 16 Sep 2017 07:24 AM
Last Updated : 16 Sep 2017 07:24 AM

சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

சென்னை மாநகர உரிமையில் நீதிமன்றத்தில் காலியாக உள்ள கம்ப்யூட்டர் ஆபரேட்டர், நகல் சரிபார்ப்பாளர், வாசிப்பாளர், ஜெராக்ஸ் ஆபரேட்டர், டிரைவர் உள்ளிட்ட பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்ற முதன்மை நீதிபதி எஸ்.சுபாதேவி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்றத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டர், சரிபார்ப்பாளர், வாசிப்பாளர், ஜெராக்ஸ் ஆபரேட்டர், டிரைவர், நகல் உதவியாளர், அலுவலக உதவியாளர், குடிநீர் பராமரிப்பாளர், துப்புரவு பணியாளர், காவலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் இதுதொடர்பாக www.ecourts.in/tn/chennai என்ற இணையதள முகவரியிலும் கூடுதல் விவரங்களைப் பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x