Published : 28 Sep 2017 08:15 AM
Last Updated : 28 Sep 2017 08:15 AM

குன்றத்தூரில் தொடர் திருட்டு: கைது செய்யப்பட்டவரிடம்35 பவுன் பறிமுதல்

குன்றத்தூரில் தொடர் திருட்டில் ஈடுபட்ட சேலத்தைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 35 பவுன் தங்க நகைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

மாங்காடு, குன்றத்தூர் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து வீடுகளின் பூட்டுகளை உடைத்து கொள்ளைச் சம்பவம் நடைபெற்று வந்தது. இதனையடுத்து திருடும் கும்பலைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இதில் குன்றத்தூர் சக்தி நகர், பேருந்து நிறுத்தத்தில் சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த நபரைப் பிடித்து தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், அந்த நபர், சேலம், இளம்பிள்ளை கிராமம், பட்டப்பன் கோவில் தெருவைச் சேர்ந்த பிரம்மமூர்த்தி (25) என்பது தெரியவந்தது. இரவு நேரங்களில் தனியாக நடந்து செல்பவர்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி நகை, பணம் பறித்து, மேலும் மாங்காடு, குன்றத்தூர், போரூர் ஆகிய பகுதிகளில் பூட்டிய வீட்டை உடைத்து நகைகளைக் கொள்ளை அடித்து வந்திருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் இவர் மீது 19-க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் மற்றும் கொலை வழக்குகளும் உள்ளன. இதுதொடர்பாக குன்றத்தூர் போலீஸார் கைது செய்து பிரம்மமூர்த்தியிடமிருந்து 35 சவரன் தங்க நகை பறிமுதல் செய்து, ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x