Published : 05 Mar 2023 07:33 PM
Last Updated : 05 Mar 2023 07:33 PM

மதுரை தமிழ் சங்கத்தில் எம்ஜிஆர் படம் அகற்றம் - முதல்வர் கேள்வி கேட்காதது ஏன்?: ஆர்பி.உதயகுமார்

கோப்புப்படம்

மதுரை: எம்ஜிஆரை பெரியப்பா எனக்கூறும் ஸ்டாலின், மதுரை தமிழ் சங்கத்தில் அவரின் படம் அகற்றப்பட்டதை கள ஆய்வு செய்வாரா? என்று முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: ''உலகத் தமிழ் சங்கத்தை மதுரையில் நடத்தி, எட்டாவது வள்ளலாக எம்ஜிஆர் திகழ்ந்து வருகிறார். உலகத் தமிழ் சங்கத்தில் எம்ஜிஆர் படம் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த படம் தற்போது அகற்றப்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் அடிக்கடி எம்ஜிஆரை பெரியப்பா என்று கூறி வருகிறார். தற்போது எம்ஜிஆர் படம் அகற்றப்பட்டது அவரின் கவனத்திற்கு வந்ததா?உலக தமிழ்சங்கத்தில் எம்ஜிஆர் படத்தை அகற்றி இருப்பதை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. எம்ஜிஆரை பெரியப்பா எனக்கூறும் உங்கள் மனசாட்சி அதை ஏற்றுக் கொள்கிறதா?

அண்ணாவின் தலைமையில் இயங்கி வந்த திராவிட முன்னேற்றக் கழகத்தை, தனது திரைப்படங்கள் மூலமும், தான் செல்லும் இடங்களிலும் வளர்க்க பாடுபட்டவர் எம்ஜிஆர். மதுரையில் கள ஆய்வுக்கு வந்துள்ள முதல்வர் ஸ்டாலின் கள ஆய்வில் முதலில் எம்ஜிஆர் படம் எங்கே போனது என்று உலக தமிழ்சங்கத்தில் பணிபுரிவோரிடம் கேள்வி எழுப்பி, மீண்டும் அவரது படத்தை அங்கு வைத்தால் எம்ஜிஆர் பக்தர்கள் உங்களை ஏற்றுக் கொள்வார்கள். திமுக ஆட்சியில் ஜெயலலிதாவின் திட்டமும் இருட்டடிப்பு செய்யப்பட்டது போல் எம்ஜிஆரின் படமும் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது.''

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x