Published : 04 Mar 2023 04:06 AM
Last Updated : 04 Mar 2023 04:06 AM

சென்னை உயர் நீதிமன்றத்தில் 5 கூடுதல் நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக நியமனம்

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாகப் பணியாற்றி வரும் 5 நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.ஸ்ரீமதி, டி.பரத சக்ரவர்த்தி, ஆர்.விஜயகுமார், முகமது ஷபீக், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோர் கடந்த 2021-ம் ஆண்டு கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில் இவர்கள் 5 பேரையும் சென்னை உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து, இவர்கள் 5 பேருக்கும் உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, விரைவில் நிரந்தர நீதிபதிகளாகப் பதவிப்பிரமாணம் செய்து வைக்கவுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x