Published : 04 Mar 2023 06:08 AM
Last Updated : 04 Mar 2023 06:08 AM

வேலூர் | அதிக விபத்துகள் ஏற்படும் நேரம் எது? - சென்னை ஐஐடி குழுவினர் ஆய்வில் அதிர்ச்சி தகவல்

வேலூர் மாவட்டத்தில் விபத்துகளை குறைக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து காவல் கட்டுப்பாட்டு அறையில் சென்னை ஐஐடி குழுவினருடன் நேற்று ஆய்வு செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன். படம்: வி.எம்.மணிநாதன்.

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் மாலை 5 முதல் இரவு 9 மணி வரை அதிகப்படியான விபத்துகள் ஏற்படுவது சென்னை ஐஐடி குழுவினரின் ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதைத் தவிர்க்க 53 இடங்களில் இரவில் ஒளிரும் பிரதிபலிப் பான்கள், எச்சரிக்கை பலகைகள் பொருத்தவும் பேரிகார்டுகள் வைக்கவுள்ளதாக எஸ்.பி., ராஜேஷ் கண்ணன் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளில் விபத்து களின் எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில் கடந்த ஆண்டு திடீரென அதிகரித்தது. கடந் தாண்டு மட்டும் விபத்துகளில் 268 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்துகளை குறைக்க விஐடி வல்லுநர் குழுவினருடன் இணைந்து காவல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக, சென்னை ஐஐடி குழுவினருடன் விபத்துகள் தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

இது தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட காவல் கண் காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டுப் பாட்டு அறையில் நேற்று நடை பெற்றது.

இதில், கடந்தாண்டு நடைபெற்ற விபத்துகள் குறித்து ஆய்வு செய்ததில் அதிகப்படியான விபத்துகள் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற்றதும் வாரத்தின் இறுதி நாட்களான வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை நாட்களில் நடைபெறுவதும் தெரிய வந்துள்ளது.

39.19 சதவீதம் தேசிய நெடுஞ்சாலையிலும் 37.64 சதவீதம் மாநில நெஞ்சாலைகளிலும், 23.15 சதவீதம் இதர சாலைகளிலும் முறையே அதிக விபத்துகள் ஏற்படுகின்றன.

அதிலும், பாதசாரிகள் விபத்து களில் அதிகம் இறக்கின்றனர். இரு சக்கர வாகனங்கள் மட்டுமே அதிக விபத்துகளை ஏற்படுத்துவதும் விபத்தில் சிக்கும் வாகனங் களாகவும் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வேலூர் வடக்கு காவல் நிலைய எல்லையில் நேஷ்னல் ரவுன்டானா, ஜி.எஸ் மஹால் அருகில், குடியாத்தம் நகரில் புதிய பேருந்து நிலையம் அருகில், வேலூர் தெற்கில் டான்போஸ்கோ பள்ளி, ஊரீசு பள்ளி அருகில், பாகாயத்தில் தொரப்பாடி பெட்ரோல் பங்க் அருகில், காட்பாடியில் விஐடி ரோடு, கே.வி.குப்பத்தில் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் அதிக விபத்து ஏற்படும் பகுதியாக உள்ளன.

இதையடுத்து, விபத்துகள் ஏற்படும் இடங்களில் வாகன தணிக்கையை அதிகரிக்க காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.

விபத்து ஏற்படும் இடங்களில் அதிக வேகத்தில் வாகனங்கள் ஓட்டுவதால் விபத்து ஏற்படுகிறதா? இல்லை மூன்று பேர் பயணம், எதிர் திசையில் வாகனம் ஓட்டுவதால் விபத்து ஏற்படுகிறதா? போன்ற காரணங்களுக்கு ஏற்ப சாலை போக்குவரத்து விதி மீறல் புகாரில் அபராதங்களை வசூலிக்க உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து, வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன், ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறும்போது, ‘‘வேலூர் மாவட்டத்தில் அதிக விபத்துகள் ஏற்படும் 53 முக்கிய இடங்களில் பிளிங்கர்கள் (இரவில் ஒளிரும் பிரதிபலிப்பான்கள்), எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட உள்ளன.

அதேபோல், புதிதாக 300 பேரிகார்டுகள் (இரும்பு தடுப்புகள்) வாங்கப்பட்டு குறிப்பிட்ட இடங் களில் பயன்படுத்தப்படும். மேலும், சாலை பாதுகாப்பு குழுவின் மூலம் பரிந்துரை செய்யப்பட்ட சாலை திருத்தங்களை தேசிய நெடுஞ் சாலை, மாநில நெடுஞ்சாலை, ஊரக சாலைகளில் மேற்கொள்ள அந்தந்த நிர்வாகங்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x