Published : 28 Feb 2023 06:21 AM
Last Updated : 28 Feb 2023 06:21 AM

உயர் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமைகளில் ஆன்லைன் விசாரணை

சென்னை: சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இனி ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் ஆன்லைன் மூலமாகவும் விசாரணை நடத்தப்படும் என உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் பி.தனபால் அறிவித்துள்ளார்.

மார்ச் 3 முதல்: தற்போது உயர் நீதிமன்றத்தில் காணொலி காட்சி மூலமாக அவ்வப்போது வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மார்ச் 3-ம் தேதிமுதல், ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் வழக்குகள் ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் விசாரிக்கப்படும் என்றும், இந்த வசதியை உயர்நீதிமன்றத்துக்கு நேரில் வர முடியாத வழக்காடிகள், வழக்கறிஞர்கள் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தலைமைப் பதிவாளர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x