Published : 25 Feb 2023 04:12 AM
Last Updated : 25 Feb 2023 04:12 AM

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - கருத்துக் கணிப்பு வெளியிட தடை

ஈரோடு (கிழக்கு) தொகுதியில் உள்ள ஒவ்வொரு சாவடிக்கும் அனுப்ப வேண்டிய வாக்குப் பொருட்களை தயார் செய்யும் தேர்தல் பணியாளர்கள் - படங்கள் கோவர்தன் எம்

சென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் 27-ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். இதையொட்டி, பிப்.25-ம்தேதி (இன்று) மாலை 6 மணி முதல் வாக்குப்பதிவு முடியும் வரை, மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி பல்வேறு விதிமுறைகள் அமலில் இருக்கும். அதன்படி, தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டம், ஊர்வலத்தை யாரும் ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ, பங்கேற்கவோ கூடாது.

தேர்தல் விவகாரத்தை திரைப்படம், தொலைக்காட்சி, எஃப்.எம். வானொலி, வாட்ஸ்-அப், முகநூல், ட்விட்டர் உள்ளிட்டவை வாயிலாக மக்களின் பார்வைக்கு கொண்டுசெல்ல கூடாது. இதை மீறினால் 2 ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

25-ம் தேதி (இன்று) மாலை 6 மணி முதல் 48 மணி நேரத்துக்கு கருத்துக் கணிப்பு, வாக்குப்பதிவு ஆய்வு முடிவுகள் உள்ளிட்டவற்றை மின்னணு ஊடகங்களில் வெளியிட தடை விதிக்கப்படுகிறது. வரும் 27-ம் தேதி மாலை 7 மணி வரை, வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கில் இதுவரை 688 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் அதிகபட்சமாக 547 வழக்குகள்மதுவிலக்கு தடுப்பு தொடர்பானவை என்று செய்தியாளர்களிடம் சாஹு கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x