Published : 31 May 2017 03:18 PM
Last Updated : 31 May 2017 03:18 PM

சென்னை ஐஐடி மாணவர் தாக்குதல் சம்பவம்: 9 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு

சென்னை ஐஐடியில் பிஎச்டி ஆய்வு மாணவர் சூரஜ் தாக்கப்பட்ட சம்பவத்தில் 9 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே போல் தாக்குதலுக்கு உள்ளான சூரஜ் மீதும் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை ஐஐடியில் மாட்டுக்கறி திருவிழா நடத்திய சூரஜ் என்கிற ஆய்வு மாணவர் மீது சக மாணவர்கள் சிலர் நேற்று கடுமையான தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதலுக்கு கடுமையான கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. தாக்கப்பட்ட மாணவர் சூரஜ்ஜூக்கு ஆதரவாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார். சூரஜ் மீது தாக்குதல் நடத்திய மாணவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் சூரஜ் அளித்த புகாரின் பேரில் 9 மாணவர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் தாக்குதல் நடத்தியதாக சூரஜ் குற்றம் சாட்டியிருந்த மாணவர்கள் அளித்த புகாரின் பேரில் சூரஜ் மீது இரண்டு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.









.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x