Published : 22 Feb 2023 06:14 PM
Last Updated : 22 Feb 2023 06:14 PM

குறிப்பிட்ட சமுதாயம் குறித்து சர்ச்சை கருத்து: சீமான் மீது வழக்குப் பதிவு

சீமான் | கோப்புப் படம்

சென்னை: குறிப்பிட்ட சமுதாயம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த சீமான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சில நாட்களுக்கு முன் பிரச்சாரம் மேற்கொண்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒரு குறிப்பிட்ட சமுதாயம் குறித்து பேசியதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. இது தொடர்பாக பல்வேறு இடங்களில் சீமானுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சர்ச்சை கருத்து குறித்து சீமான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் சீமான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x