Published : 24 May 2017 08:39 PM
Last Updated : 24 May 2017 08:39 PM
தமிழகத்தின் சில இடங்களில் வியாழக்கிழமை சூறைக்காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கத்திரி வெயில் நிலவி வரும் நிலையில், பல இடங்களில் கடுமையான வெயில் பதிவாகி வந்தது. இந்த நிலையில் வெப்பச்சலனம் காரணமாக கடந்த சில நாள்களாக பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்துள்ளது.
புதன்கிழமை மாலை நிலவரப்படி தமிழகத்தில் அதிகபட்சமாக திருத்தணியில் 109 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது. அதேபோல வேலூர், சென்னையில் 106 டிகிரி, பாளையங்கோட்டையில் 104 டிகிரி, கரூரில் 102 டிகிரி, மதுரையில் 101 டிகிரி, புதுச்சேரியில் 100 டிகிரி வெயில் பதிவானது. அதேபோல சேலத்தில் 99 டிகிரி, திருச்சியில் 98 டிகிரி, கோவை, தருமபுரியில் 97 டிகிரி வெயில் பதிவானது.
தொடர்ந்து பல இடங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி வந்தாலும், தமிழகத்தின் சில இடங்களில் வியாழக்கிழமை சூறைக்காற்றுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. புதன்கிழமை மாலை வரையிலான நிலவரப்படி, பாளையங்கோட்டையில் மட்டும் 5.9 மி.மீ. மழை பெய்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT