Published : 17 Feb 2023 10:43 AM
Last Updated : 17 Feb 2023 10:43 AM

சென்னை வரும் விரைவுப் பேருந்துகள் தாம்பரம் வழியாக கோயம்பேடு செல்ல வேண்டும்: போக்குவரத்து கழகம் உத்தரவு

அரசு விரைவு பேருந்துகள் | கோப்புப் படம்

சென்னை: வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வரும் விரைவு பேருந்துகள் அனைத்தும் தாம்பரம் வழியாக கோயம்பேடு செல்ல வேண்டும் என்று விரைவு அரசுப் போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் பிறப்பித்துள்ள உத்தரவில், "விரைவு போக்குவரத்துக்கழக பேருந்துகள் சென்னைக்கு வரும் பயணிகளின் வசதிக்காக அனைத்து ஊர்களில் இருந்து சென்னை வந்தடையும் பேருந்துகளை தாம்பரம் வழியாக இயக்க வேண்டும். தாம்பரம் மாநகர பேருந்து நிறுத்தத்தில் இருந்து தள்ளி இடது புறமாக நிறுத்தி பயணிகளை இறக்கி விட வேண்டும்.

இதன் மூலம் தாம்பரம், குரோம்பேட்டை, ஆலந்தூர், வடபழனி செல்லும் பயணிகள் பயன் அடைவதுடன், நமது கழகத்திற்கு வருவாய் அதிகரிப்பு ஏற்படும். மாலை 5 மணிக்கு மேல் பெருங்களத்தூர் வழியாக வரும் பேருந்துகள் மட்டும் மதுரவாயல் வழியாக கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு இயக்க வேண்டும்." இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x