Published : 05 May 2017 08:49 AM
Last Updated : 05 May 2017 08:49 AM
இந்தி திணிப்பு மற்றும் ‘நீட்’ தேர்வை எதிர்த்து திமுக சார்பில் மாவட்ட வாரியாக கருத்தரங்கம் நடத்தப் படுகிறது.
திமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திமுக மாவட்டச் செயலாளர் கூட்டம் கடந்த மாதம் 28-ம் தேதி அண்ணா அறிவாலயத்தில், செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் மத்திய அரசின் இந்தி திணிப்பை எதிர்த்தும், ‘நீட்’ தேர்வை ரத்து செய்யக் கோரியும் மாவட்டம்தோறும் கருத்தரங்கங்கள் நடத்த முடிவெடுக்கப்பட்டது. இதன்படி, நாளை 6-ம் தேதி முதல் இம்மாதம் 27-ம் தேதி வரை மாவட்டம்தோறும் கருத்தரங்கங்கள் நடத்தப் படவுள்ளன.
வேலூர் மாவட்டம், அனுகுலாஸ் கன்வென்சன் சென்டரில் நடக்கும் முதல் கருத்தரங்கில், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, தொடக்கவுரை ஆற்றவுள்ளார். இதில், இந்தி திணிப்பு தொடர்பாக துரைமுருகனும், ‘நீட்’ தேர்வு தொடர்பாக டி.கே.எஸ்.இளங்கோவனும் பங்கேற் கின்றனர். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT