Published : 13 May 2017 09:07 AM
Last Updated : 13 May 2017 09:07 AM

17 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

தமிழகத்தில் 17 ஐபிஎஸ் அதிகாரி களுக்கு டிஐஜி மற்றும் தேர்வு நிலை எஸ்.பி-யாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

நேரடி ஐபிஎஸ் அதிகாரிகளாக 2003-ம் ஆண்டு தேர்வான அமித்குமார் சிங், அஷ்வின் எம் கோட்னீஸ், வி.பாலகிருஷ்ணன், பிரதீப் குமார், ஆர்.சுதாகர் ஆகியோருக்கு தேர்வு நிலை எஸ்.பி. நிலையில் இருந்து டிஐஜியாக பதவி உயர்வு அளித்து உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், 2004-ம் ஆண்டு நேரடி ஐபிஎஸ் அதிகாரிகளாக பணியில் சேர்ந்த கே.ஏ.செந்தில் வேலன், அவினாஷ் குமார், அஸ்ரா கார்க், ஏ.ஜி.பாபு, பி.கே.செந்தில்குமார், ஏ.டி.துரைகுமார், சி.மகேஸ்வரி, என்.இசட்.ஆசி யம்மாள், ஏ.ராதிகா, ஆர்.லலிதா லட்சுமி, எம்.வி.ஜெயகவுரி, என்.காமினி ஆகியோர் தற்போது எஸ்.பி.க்களாக உள்ளனர். இவர் களுக்கு தேர்வு நிலை எஸ்பி-க் களாக பதவி உயர்வு அளிக்கப் பட்டுள்ளது.

இவர்கள் அடுத்த காலிப் பணியிடங்கள் உருவாகும் போது, தேர்வுநிலையில் இருந்து டிஐஜியாக பதவி உயர்வு பெறுவார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x