Published : 19 May 2017 08:01 AM
Last Updated : 19 May 2017 08:01 AM
சர்வதேச அளவில் தங்கம் விலை திடீரென உயர்ந்ததால் சென்னை யில் ஒரே நாளில் பவுனுக்கு ரூ.368 உயர்ந்தது. இதனால், கடந்த 15 நாட்களுக்குப் பிறகு ஒரு பவுன் தங்கம் விலை மீண்டும் ரூ.22 ஆயிரத்தை தாண்டியது.
சர்வதேச அளவில் தங்கம் விலை யில் ஏற்படும் மாற்றத்தால், உள்ளூரி லும் தங்கம் விலை ஏற்ற, இறக்க மாக உள்ளது. சர்வதேச அளவில் தங்கம் விலையில் நேற்று 5 சதவீத உயர்வு காணப்பட்டது. இதனால், உள்ளூரிலும் தங்கம் விலை உயர்ந்தது.
சென்னையில் 22 கேரட் தங்கம் நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.2,721-க்கும், ஒரு பவுன் ரூ.21,768-க்கும் விற்பனை ஆனது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.46 என பவுனுக்கு ரூ.368 உயர்ந்தது. இதனால் ஒரு கிராம் தங்கம் ரூ.2,767-க்கும், ஒரு பவுன் ரூ.22,136-க்கும் விற்பனையானது.
வெயில் அதிகரித்ததோடு, தங்கம் விலையும் உயர்ந்ததால் சென்னையில் தி.நகர், மயிலாப்பூர், பிராட்வே, புரசைவாக்கம் உள்ளிட்ட இடங்களில் உள்ள நகைக் கடை களில் வழக்கத்தைவிட கூட்டம் குறைவாகக் காணப்பட்டது.
விலை உயர்வு குறித்து சென்னை தங்கம், வைர வியாபாரிகள் சங்க பொதுச் செயலாளர் எஸ்.சாந்த குமார் கூறியபோது, ‘‘சர்வதேச அள வில் தங்கம் விலை திடீர் உயர்வு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி ஆகியவற்றால் தங்கம் விலை உயர்ந்துள்ளது.
கடந்த 15 நாட்களுக்கு பிறகு பவுன் விலை மீண்டும் ரூ.22 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அடுத்த சில நாட்களில் தங்கம் விலை குறைய வாய்ப்பு உள்ளது’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT