Last Updated : 12 Dec, 2016 12:47 PM

 

Published : 12 Dec 2016 12:47 PM
Last Updated : 12 Dec 2016 12:47 PM

கரை கடக்கத் தொடங்கியது வார்தா: தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்

வார்தா அதிதீவிர புயல் சென்னை அருகே கரையைக் கடக்கத் தொடங்கியதாக வானிலை ஆர்வலர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த வார்தா புயல் கரையைக் கடந்து கொண்டிருக்கிறது.

இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறும்போது, "வார்தா அதிதீவிர புயல் சென்னை அருகே கரையைக் கடக்கத் தொடங்கியது. இன்னும் ஓரிரு மணி நேரத்தில் வார்தா புயலின் மையப்பகுதி கரையைக் கடக்கும். தற்போது மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் வீசும் காற்று புயலின் மையப் புள்ளி கரையைக் கடக்கும்போது அதன் வேகம் இன்னும் அதிகமாக இருக்கும்.

சென்னையில் நுங்கம்பாக்கத்தில் அதிகபட்சமாக 150 மி.மீ மழை பெய்துள்ளது. புயல் கரையைக் கடந்த பிறகு மழையின் அளவு குறைய வாய்ப்பிருக்கிறது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x