Published : 11 Jan 2023 01:29 PM
Last Updated : 11 Jan 2023 01:29 PM

தமிழ்நாடே முதல்வரின் துணிவான நடவடிக்கையை பாராட்டி வருகிறது: சபாநாயகர் அப்பாவு பேச்சு

பேரவையில் பேசிய பேரவைத் தலைவர் அப்பாவு |

சென்னை: தமிழ்நாடே முதல்வரின் துணிவான நடவடிக்கையை பாராட்டி வருவதாக பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையின் இந்தாண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜன.9 ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. இதில் அரசு தயாரித்த உரையை ஆளுநர் முறையாக முழுமையாக படிக்கவில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரவையில் தெரிவித்தார். மேலும் இது தொடர்பான தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

இது தொடர்பாக இன்றைய (ஜன.11) பேரவை கூட்டத்தொடரில் பேசிய பேரவைத் தலைவர் அப்பாவு,"ஆளுநர் உரையின்போது காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் கோஷமிட்டதை தவிர்த்திருக்க வேண்டும். ஆளுநர் இருக்கை எதிரே நின்று கோஷம் எழுப்பியதை தவிர்த்திருக்க வேண்டும்.

ஆளுநர் உரையின் போது அசாதாரண சூழலை உருவாக்கியது அவையோ, அரசோ இல்லை. முதல்வரின் மதிநுட்பத்தால் தான் சட்டமன்றத்தின் மாண்பு காக்கப்பட்டது. இந்த நிகழ்வு இந்தியா முழுவதும் உள்ள சட்டமன்றங்களின் நடவடிக்கைகளுக்கு முன்னுதாரணம். இந்தியாவில் உள்ள அனைத்து சட்டமன்றங்களின் மாண்பையும் முதல்வர் காத்துள்ளார். தமிழ்நாடே முதலமைச்சரின் துணிவான நடவடிக்கையை பாராட்டி வருகிறது." இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x