Published : 29 Dec 2016 03:44 PM
Last Updated : 29 Dec 2016 03:44 PM
அதிமுக பொதுச் செயலாளராக வி.கே.சசிகலாவை நியமித்து அக்கட்சியின் பொதுக்குழு ஒப்புதல் அளித்து தீர்மானம் நிறைவேறிய உடனே வெளியே வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா பேனரின் மேல், சசிகலாவும், ஜெயலலிதாவும் ஒன்றாகக் கையில் பூங்கொத்தோடு நிற்பது போன்று அமைக்கப்பட்ட பேனர் வைக்கப்பட்டது.
அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் சாலையின் இருமருங்கிலும் முன்னாள் முதல்வரும், முன்னாள் பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் புகைப்படங்கள் அடங்கிய பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.
அதேபோல அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழுக் கூட்டங்கள் நடந்த மண்டபத்தின் வாயிலிலும் ஜெயலலிதாவின் பேனர் வைக்கப்பட்டிருந்தது.
கூட்டத்தில் அதிமுகவின் பொதுச்செயலாளராக வி.கே.சசிகலா தலைமைப் பொறுப்பு ஏற்கவேண்டும் என தீர்மானம் முன்மொழியப்பட்டது. சசிகலாவின் தலைமைக்கு விசுவாசுவத்துடன் பணியாற்ற பொதுக்குழு உறுதியேற்கிறது எனத் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை வழிமொழிந்து பொதுக்குழு உறுப்பினர்கள் இசைவு தெரிவித்தனர்.
அதிமுக பொதுச் செயலாளராக வி.கே.சசிகலாவை நியமித்து அக்கட்சியின் பொதுக்குழு ஒப்புதல் அளித்து தீர்மானம் நிறைவேறிய உடனே வெளியே வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா பேனரின் மேல், சசிகலாவும், ஜெயலலிதாவும் ஒன்றாகக் கையில் பூங்கொத்தோடு நிற்பது போன்று அமைக்கப்பட்ட பேனர் வைக்கப்பட்டது.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஏற்கெனவே எல்லாம் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டது என்பதை உறுதிப்படுத்துவது போலவே சசிகலாவுக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பூங்கொத்து வ்ழங்குவதுபோன்ற பேனர் அமைக்கப்பட்டிருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT